TamilSaaga

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் விரும்பும் “இருமுகம் கொண்ட லாட்டரி” : கோடிகளை பெற்ற முகம், வாழ்க்கையை தொலைத்த முகம்

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், விரும்பி விளையாடும், சிங்கப்பூர் லாட்டரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

“சிங்கப்பூர்.. மாலின் மேற்க்கூரையில் இருந்த ஓட்டை : தவறி கீழே விழுந்த தொழிலாளர் – என்ன நடந்தது?


சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களால் அதிகம் விளையாடப்படும் லாட்டரி பந்தயம், 4D மற்றும் டோடோ என்று அழைக்கப்படும் ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் கட்டப்படும் பந்தயங்கள் ஆகும். இந்த பந்தயங்களை விளையாட நீங்கள் சிங்கப்பூர் ரூல்ஸ் என்ற இணையதளத்தின் மூலம் கணக்கு வைத்துக்கொண்டு விளையாடலாம்.

சிங்கப்பூர் பூல்ஸ் ஒரு உலகத்தரம் வாய்ந்த கேமிங் நிறுவனமாக விளங்குகிறது. அது தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும், நியாயமான மற்றும் பாதுகாப்பான சூதாட்ட அனுபவத்தை அவர்களுக்கு உறுதி செய்யும் வகையில் தங்கள் தொழில்சார் நடத்தை மற்றும் வணிக நடத்தைகள் மீது உயர்ந்த கவனத்துடன் உலகத்தரத்திற்கு ஏற்றார்போல் வடிவமைத்துள்ளது. சிங்கப்பூர் பூல்ஸ் 4D லாட்டரி மற்றும் டோடோ பந்தயங்களை ஆன்லைனில் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் வைக்க அனுமதிக்கிறது. ஆன்லைனின் மூலம் மற்றும் தொலைபேசியின் மூலம் 4D அல்லது டோட்டோ பந்தயங்களை எப்படி விளையாடுவது என்றும், எப்படி பந்தயம் கட்ட வேண்டும் என்றும் இவர்களுடைய இணையதளத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இது மட்டுமல்ல இத்தகைய ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலமாக மட்டுமல்லாமல் கடைகளில் பணத்துடன் பந்தயம் கட்டவும் இவர்கள் வாய்ப்பு அளிக்கின்றனர்.சிங்கப்பூர் பூல்ஸ் கணக்கில் பதிவு செய்ய நீங்கள் கண்டிப்பாக சிங்கப்பூர் குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ அல்லது சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவராகவோ இருக்க வேண்டும். சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர் ஆக இருந்தால்,சரியான சிங்கப்பூர் வெளிநாட்டு அடையாள எண்ணுடன் குறைந்தது 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். உள்ளூர் மொபைல் எண்ணை வழங்க வேண்டும்.

சிங்கப்பூர் குடியிருப்பு முகவரியையும் வழங்க வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சட்டங்கள் எதற்கும் உட்படுத்தப்பட்டு இருக்கக்கூடாது. கேசினோ கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (‘CCA’) பிரிவு 162 அல்லது 165C இன் கீழ் செய்யப்பட்ட குடும்ப விலக்கு உத்தரவு CCA இன் பிரிவு 165 அல்லது 165C இன் கீழ் செய்யப்பட்ட விலக்கு ஆணை CCA இன் பிரிவு 165A(1)(a) மற்றும் (b) இன் கீழ் சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் எந்த சூதாட்ட வளாகத்திலிருந்தும் விலக்குதல். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்.

செயல்முறை

இந்த கணக்கிற்கு பதிவு செய்ய ஆன்லைன் பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு ஆன்லைன் வீடியோ அழைப்பின் மூலம் அடையாள சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளும்படி கேட்க படுவார்கள். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க உங்கள் NRIC அல்லது FIN அடங்கிய அதிகாரபூர்வ ஆவணத்துடன் ஏதேனும் ஒரு சிங்கப்பூர் பூல்ஸ் click சென்று சரி பார்க்க வேண்டும்.
FIN அல்லது பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு குடியிருப்பு முகவரிக்கான ஆதாரத்தையும் வழங்க வேண்டும்.

இந்த நிறுவனம் உங்கள் கணக்கு தகுதியை மூன்று நாட்களுக்குள் சரி பார்த்த பின்பு உங்கள் பதிவு நிலையை சரிபார்க்க உங்கள் பயனர்பெயர் மற்றும் உடன் கடவுச்சொல்லையும் உங்களுக்கு தரும் அதன்பின் நீங்கள் விளையாட உள்நுழையலாம். ஒருவேளை நீங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட் எடுக்க பரிசு விழுந்தால் பரிசுத்தொகையை பெற நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாக அல்லது சிங்கப்பூர் தீயவர்களாக இருக்க அவசியமில்லை. உங்கள் வயதுக்குரிய சான்றிதழையும் முறைப்படி சிங்கப்பூரில் விசா பெற்று வசிப்பதை காட்டினாலே போதும். ஒருவேளை பெரிய அளவிலான தொகையை நீங்கள் வென்றிருந்தால், சிங்கப்பூரிலேயே நிரந்தர குடியுரிமை பெற கூட உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பரிசுத் தொகைக்கு வரி ஏதும் கட்ட வேண்டியது இல்லை என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

“வீழ்ச்சியை சந்தித்த சிங்கப்பூரின் சுற்றுலாத் துறை” – தடுப்பூசியால் புத்துயிர் பெரும் நம்பிக்கை

எனினும், இந்த விளையாட்டின் மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் ஏராளம் என்றால், கஷ்டப்பட்டு, உழைத்த பணத்தை கோட்டைவிட்டவர்கள் அதைவிட அதிகம் என்றே கூறலாம். இந்த சுவாரஸ்யமான விளையாட்டில் மக்கள் தங்கள் பணத்தை அதிகப்படியாக செலவிடாமல், அளவோடு செலவிட்டு, அதிகமாக பயனடைய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts