TamilSaaga

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைக்க அதிக பணம் கோரிய நிறுவனம்.. சுளுக்கு எடுத்த MOM – இனியாவது திருந்துவார்களா?

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு அல்லது பணி அனுமதிச் சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கான நிபந்தனையாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து சிங்கப்பூரில் உள்ள வெகு சில முதலாளிகள் Kickbackகளை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகின்றது. கிக்பேக் என்பது வேலை அனுமதிக்கு பணம் கோருதலாகும். இவ்வாறு வேலை அனுமதிக்கு பணம் கோருவது சிங்கப்பூரை பொறுத்தவரை கடுமையான குற்றமாகும்.

இதையும் படியுங்கள் : “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்”.. தமிழகம் – சிங்கப்பூர் பயணம் : அதிவேகத்தில் விற்றுத்தீரும் மார்ச் மாத டிக்கெட் – ஏர்போர்ட்டில் இருந்து நேரடி Exclusive தகவல்கள்

இவ்வாறு பணம் வசூலித்தவர்கள் மீது

இந்நிலையில் அண்மையில் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட தகவல் ஒன்றில், இதுபோன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பணம் வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறு செய்த அந்தத் தனி நபரிடமோ அல்லது அந்த நிறுவனத்திடமோ 30,000 வெள்ளி வரை அபராதம் பெறப்படும், அல்லது இரண்டு வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட நிறுவனம், மேற்கொண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்த தடை விதிக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சகம் அறிவித்தது.

இதையும் படியுங்கள் : உலகின் மிகச் சிறிய குழந்தையை காப்பாற்றி சிங்கப்பூர் மகத்தான சாதனை – யாருக்கும் கிடைக்காத பெருமை!

சிங்கப்பூரிலுள்ள San Tong Engineering பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சில புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் அவர்களது Work Pass விண்ணப்பங்களுக்கு பணம் பெற்றதாக MOM தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் Director Chen Shiqi என்பவர் அந்நிறுவனத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் 1000 வெள்ளி முதல் 3000 வெள்ளி வரை Work Pass விண்ணப்பத்திற்கு பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த மனிதவள அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி Director Chen Shiqi என்பவருக்கு 31 வார சிறை மற்றும் 22,000 வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அந்த நிறுவனத்தின் Director Chen Shiqi மற்றும் அந்த நிறுவனம் தற்போது புலம்பெயர்ந்து தொழிலாளர்களை பணியமர்த்துவதிலிருந்து தடையும் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள வெகு சில நிறுவனங்களே இதுபோன்ற தவறுகளை ஈடுபடுவதால் நிச்சயம் மனிதவள அமைச்சகத்தின் இந்த முடிவு அவர்களுக்கு ஒரு சாட்டையடியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts