TamilSaaga

இதெல்லாமா TikTokல போடுவாங்க? – சிங்கப்பூரில் முதியவரை குளிப்பாட்டும் வீடியோவை TikTokல் போட்ட பணிப்பெண்

சிங்கப்பூரில் 33 வயதான வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண், உடல் நலம் குன்றிய முதியவர் ஒருவரைப் நிர்வாணமாக படம்பிடித்த வீடியோக்களைப் பகிர்ந்த நிலையில் நேற்று ஜனவரி 27 அன்று அந்த பணிப்பெண்ணுக்கு 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் வாங்கி சென்னைக்கு கொண்டுபோறேன்” : தங்க கட்டிகளுடன் லண்டனில் சிக்கிய பெண் – அடுத்து நடந்தது என்ன?

சிங்கப்பூரில் தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒரு வயதான நபரை குளிக்கவைக்கும் வீடியோவை அந்த நபரின் அனுமதி இல்லாமல் படம்பிடித்து, அவர் நிர்வாணமாக இருக்கும் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றிய பணிப்பெண் மீது இன்று கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அந்த 33 வயதான இந்தோனேசி பணிப்பெண் பாதிக்கப்பட்ட நபரின் சம்பந்தப்பட்ட கிளிப்களை பதிவு செய்ததாக ஏழு குற்றச்சாட்டுகள் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் புங்கோல் பகுதியில் உள்ள குடியிருப்பில் தான் இந்த குற்றங்களை அவர் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கேக் உத்தரவு காரணமாக அந்த பணிப்பெண்ணின் பெரியரை நீதிமன்றம் வெளியிடவில்லை. கடந்த ஜனவரி 2020 மற்றும் இந்த ஆண்டுக்கு இடையில் ஏழு முறை அவரை குளிப்பாட்டிய போது அந்த பெண் தனது மொபைல் போனை அந்த வீடியோவை பதிவு செய்ய பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

உலகின் மிகச் சிறிய குழந்தையை காப்பாற்றி சிங்கப்பூர் மகத்தான சாதனை – யாருக்கும் கிடைக்காத பெருமை!

மேலும் அந்த நபருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர் நிர்வாணமாக இருக்கும் கிளிப்களை மற்றொரு தரப்பினருடன் வாட்ஸ்அப் வழியாக குறைந்தது நான்கு முறை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த முதியவரின் வயது மற்றும் உடல் நிலை பற்றிய விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி, அந்த பணிப்பெண் முதியவரின் அனுமதியின்றி நிர்வாண கிளிப்களில் ஒன்றை சமூக ஊடக தளமான டிக்டோக்கில் பதிவேற்றினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts