TamilSaaga

பெண்ணின் மார்பைத் தொட வந்த நபருக்கு பெண் கொடுத்த சவுக்கடி!

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு தினமும் தண்டனைகள் தரப்பட்டாலும் இதுப்போன்ற சில இளைஞர்கள் செய்யும் செயல்கள் நம்மை திக்கு முக்காட வைக்கிறது. ஆனால் இந்த இடத்தில் இளம்பெண்ணின் துணிச்சல் தான் நம்மை வியப்படைய செய்கிறது.

நேற்றைய தினம் இணையத்தில் வெளியான இந்த வீடியோ குறித்து தான் சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. அந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் இதோ..

ஆள்அரவமற்ற ஒதுக்குப்புறமான சாலையில் அந்த பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.பைகில் வரும் ஒரு இளைஞர் பைக்கை ஸ்லோ செய்துவிட்டு, அருகில் வந்து அட்ரஸ் கேட்கிறார்.

அப்போது அந்த இளைஞர் திடீரென பாவனாவின் மார்பகங்களை தொட்டு, அறுவறுப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்.. இதனால் பதறியும் துடிதுடித்தும், அதிர்ந்தும் போனா அந்த பெண் அந்த இளைஞரின் பைக்கை தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி தூக்கி அவனை சாக்கடையில் கீழே தள்ளி விடுகிறார்.

இதனால் அந்த இளைஞரால் பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.. கிட்டத்தட்ட இப்படியே சுமார் 30 செகண்டுகள் பைக்கை தூக்கி கொண்டே நிற்கிறார். அந்த சமயத்தில் அந்த வழியாக அந்த பெண்ணுக்கு உதவுகிறார்கள். இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை அந்த பெண் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.. தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலையும், அதை எப்படி எதிர்கொண்டேன் என்பதையும் விளக்கி உள்ளார்.. , . அந்த பெண்ணின் செயலுக்கு இணையவாசிகளின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related posts