TamilSaaga

“எதிர்வரும் 20 ஆண்டுகள்” : உள்ளூரில் வளர்க்கப்படும் மீன்களை நாம் ருசிக்க முடியுமா? – சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது?

இந்த தொற்று நோய் சிங்கப்பூரர்களாகிய நம்மை மட்டும்மல்லாமல் இந்த உலக மக்களையே தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் நிலைக்கு மாற்றியுள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல. மேலும் நம்மை பொறுத்தவரை Covid-19 தொற்றுநோய், எதிர்கால இடையூறுகளைச் சமாளிக்கவும், சிங்கப்பூரின் தயார்நிலையை மேம்படுத்துவதற்கான அவசரத்தையும் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது என்றே கூறலாம். அதில் ஒன்று தான் சிங்கப்பூரர்களுக்கான உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது.

“உக்ரைன் தலைநகரை தாக்கும் ரஷ்ய படைகள்” : “ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தும் உக்ரைன்” – நிலவும் உச்சகட்ட பதட்ட நிலை!

நமது உணவு பாதுகாப்பை பலப்படுத்த நமது உணவு இறக்குமதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதன் மூலமும், வீட்டிலேயே (நாட்டிலேயே) நமது உணவை உற்பத்தி செய்வதன் மூலமும் அதை அடைய முடியும். இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் பல்பொருள் அங்காடிகளைச் சுற்றிப் பார்க்கும்போது, ​​புதிய மீன்கள் உட்பட சிங்கப்பூரில் வளர்க்கப்படும் பல்வேறு வகையான விளைபொருட்களை நீங்கள் நிச்சயம் கவனிப்பீர்கள் என்று தான கூறவேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள கடல் சார்ந்த பண்ணைகளால் உற்பத்தி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு “Mullet” (Mullet என்பது உண்ணக்கூடிய மீன் வகை) ஒரு எடுத்துக்காட்டு. பாம்ஃப்ரெட் மற்றும் குரூப்பர் போன்ற பல மதிப்புமிக்க மீன்களுடன் ஒப்பிடும்போது இது ஓரளவு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால் Mullet சத்தானது, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் பி6 நியாசின் அதிகம் உள்ள மீன். நீராவியில் வேகவைத்து, கிரில் அல்லது வறுவல் என்று பல விதங்களில் அதை நாம் ருசிக்கலாம்.

இன்றைய தேதியில், சிங்கப்பூரில் 110 கடல் சார்ந்த பண்ணைகள் உள்ளன, அவை கடந்த 2021ம் ஆண்டில் உள்ளூர் மீன் உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடல் சார்ந்த பண்ணைகளில் திறந்த வலை கூண்டு அமைப்புகள் மற்றும் சிங்கப்பூர் கடல் பகுதியில் அமைந்துள்ள மூடிய கட்டுப்பாட்டு மிதக்கும் அமைப்புகள் ஆகியவை அடங்கும். அதில் உள்நாட்டில் வளர்க்கப்படும் பல மீன்களில் Mullet வகையும் ஒன்றாகும். மேலும் உள்ளூர் மீன் உற்பத்தியைத் தொடரவும், நமது எதிர்கால சந்ததியினருக்கு உணவளிக்கவும், விவசாய நடைமுறைகள் நிலையானதாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

“சிங்கப்பூரில் பெருந்தொற்று அதிகரிப்பு” : திட்டமிடப்பட்ட தளர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது – MOH விளக்கம்

பண்ணைகள் தங்கள் மீன் வளர்ப்பு நடைமுறைகளை மேம்படுத்த உதவ, SFA இந்த பிரச்சினையில் பண்ணைகளை ஆதரிக்க பல ஆதாரங்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் உள்ள பல்வேறு மீன்வளர்ப்பு முறைகளுக்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நல்ல மீன்வளர்ப்பு பயிற்சிக்கான சிங்கப்பூர் தரநிலை விவரக்குறிப்பை (SS 670:2021) பண்ணைகள் பின்பற்றலாம். எதிர்கால தேவையை சமாளிக்க இன்றே உழைக்கும் நமது சிங்கப்பூருக்கு நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று தான் கூறவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts