TamilSaaga

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் : இறுதி சுற்றுக்கு முன்னேறினர் சிங்கப்பூரின் யிப் பின் சியு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரின் யிப் பின் சியு தனது 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் எஸ் 2 போட்டிகளில் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரது நான்காவது பாராலிம்பிக் போட்டியில், இரட்டை உலக சாம்பியன் யிப் 14.46 நேரத்தில் தனது இலக்கை முடித்தார். மற்றும் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 4.40 மணிக்கு நடக்கும் இறுதிப் போட்டியில் அவர் பங்குபெறுகின்றார்.

ஏற்கனவே யிப் மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 50 மீ பேக்ஸ்ட்ரோக் எஸ் 2 மற்றும் 100 மீ பேக்ஸ்ட்ரோக் எஸ் 2 போட்டிகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 2008ல் பெய்ஜிங் பாராலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் யிப் பின் சியு விருது பெற்றுள்ளார்.

Related posts