TamilSaaga

“தஞ்சோங் பகார்” கட்டடத்தில் தீ விபத்து… விரைந்த தீயணைப்பு படை.. அவசர அவசரமாக வெளியேறிய மக்கள்!

சிங்கப்பூரின் தஞ்சோங் பகார் என்னும் ஏரியாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ பிடித்ததை அடுத்து அங்கிருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கட்டிடத்தில் தீப்பிடித்ததை அடுத்து ஜூன் 30-ம் தேதி சுமார் 2 மணி அளவில் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக தெரிகின்றது. இதை அடுத்து தற்காப்பு படை தீயணைப்பு உபகரணங்களுடன் உடனே கட்டிடத்திற்கு விரைந்தனர்.

அடுக்கு மாடி கட்டிடத்தில் உள்ள ஐந்தாவது மாடியில் படுக்கையறையில் தீப்பிடித்ததாக தெரிகின்றது. இதனால், படுக்கை அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீ பற்றி தீ மெல்ல மெல்ல அடுத்த பகுதிகளுக்கு பரவியது. இது குறித்து அருகில் உள்ள பிளாக்கில் குடியிருக்கும் பெண்மணி கூறும் பொழுது, “நெருப்பு மிகப்பெரியதாக எரிந்தது, நான் மிகவும் பயந்து விட்டேன்” என்று கூறினார்.

எனினும் தகவல் கிடைத்த உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து கட்டிடத்திற்கு வந்தனர் என்றும் தெரிவித்தார். இந்த தீ விபத்தால் சேதம் பெரிதும் இல்லாத பொழுதும், பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

தீ வேகமாக பரவினாலும், தீயணைப்பு வீரர்களின் துரிதமான செயலால், நெருப்பானது விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Related posts