TamilSaaga

சிங்கப்பூரில் கண்ணிமைக்கும் நேரத்தில் நசுங்கிய தமிழக ஊழியரின் உடல்… அங்கேயே பிரிந்த உயிர் – 7 ஆண்டு உழைப்பு ஒரு நொடியில் நாசம்!

என்னவென்று சொல்வது இந்த கொடுமையை…! பல கனவுகளை சுமந்து சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு நொடியும் தங்களை மிக மிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், அவர்களை நம்பி ஒரு குடும்பமே காத்திருக்கிறது.

ஆனால், நேற்று சிங்கப்பூரில் அரங்கேறியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழக ஊழியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் Yishun பகுதியில், நேற்று (ஏப்.27) காலை 8:09 மணியளவில் தமிழக தொழிலாளி சண்முகம் ஜோதி (வயது 39) என்பவர் Prime Mover வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த Prime Mover என்பது கனரக வாகனமாகும். அதிக எடை கொண்ட வண்டி இது.

மேலும் படிக்க – இந்திய வம்சாவளி சிங்கப்பூரர்.. தடையை மீறி கடலுக்கு சென்றதால் இழுத்துச்சென்ற அலை – காப்பாற்ற சென்று உயிரிழந்த தந்தை மற்றும் மகன்

இந்நிலையில், நேற்று காலை சரக்குகளை ஏற்றுவதற்காக Prime Mover வாகனத்தை ஓட்டிச் சென்ற சண்முகம், அதனை 15 Yishun தொழிற்சாலை Street 1 அருகே உள்ள block அருகே நிறுத்தியிருக்கிறார். வாகனத்தை நிறுத்தும் போதே அதனை ஒரு சாய்வான பகுதியில் தான் பார்க் செய்திருக்கிறார்.

இங்கு அவர் செய்த மிகப்பெரும் தவறு, Parking Brake பயன்படுத்தாமல் விட்டது தான். ஏதோ ஒரு நியாபகத்தில் Parking Brake பயன்படுத்தாமல் கீழே இறங்கிய சண்முகம், அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செய்த போதுதான், தான் செய்த தவறு அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. Parking Brake யூஸ் பண்ணவில்லையே என்று அவர் நினைக்கும் நொடி, Slope பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம், அப்படியே சரிந்து கீழே வர, சண்முகத்தின் இடித்து தள்ளி அவர் மேல் ஏறி இறங்கியது.

இந்த சம்பவம் அனைத்தும் அருகில் உள்ள தொழில்துறை கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் கேமராவில் பதிவாகியுள்ளது.

போலீசாருக்கு உடனடியாக தகவல் கிடைக்க, மருத்துவர்களும் சம்பவ இடத்துக்கு விரைய, அந்த இடமே பரபரப்புக்கு உள்ளானது. ஆனால், சண்முகத்தை சோதித்த மருத்துவர்கள், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

வெளியே பார்க்க கூட முடியாத அளவுக்கு அவரது உடல் மோசமாக சேதமடைந்துள்ளது. சிங்கப்பூரில் 7 ஆண்டுகள் Logistics நிறுவனத்தில் பணியாற்றிய சண்முகத்தின் இந்த கோர மரணம், தமிழக ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts