TamilSaaga

சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்பட்ட “சைனாடவுன்” : மக்கள் கூட்டம் இல்லாததால் வியாபாரம் மந்தம்

சிங்கப்பூரில் சைனாடவுன் வளாகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (செப்டம்பர் 16) 3 நாட்கள் பூட்டுதலை தொடர்ந்து இன்று மீண்டுக் திறக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு, பாதுகாவலர்கள் குறைவாகவே இருந்தனர். 700 ஸ்டால்களைக் கொண்ட இந்த வளாகம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் நேற்று புதன்கிழமை இரவு 11.59 மணி வரை மூடப்பட்டது. 66 கோவிட் -19 வழக்குகள் அங்குள்ள கிளஸ்டருடன் இணைக்கப்பட்ட பின்னர் சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்ய சைனாடவுன் மூடப்பட்டது.

கடந்த புதன்கிழமை நிலவரப்படி இந்த சைனாடவுன் கிளஸ்டர் 197 வழக்குகளாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பெரும்பாலோர் வளாகத்தில் வேலை செய்யும் ஸ்டால் வைத்திருப்பவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது 260 உணவுக் கடைகளில் சுமார் 10 மட்டுமே வணிகத்திற்காக திறந்திருந்தன மேலும் யாரும் அங்கு உணவருந்தவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.

வியாபாரத்தை மீண்டும் தொடங்கிய சில ஸ்டால்கள் 80 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வீழ்ச்சியடைவதாகவும், கடந்த ஆண்டு அமலில் இருந்த சர்க்யூட் பிரேக்கருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவென்றும் ஸ்டால் வைத்திருப்பவர்கள் கூறினார். உணவகங்கள் திறக்கப்பட்ட பிறகும் மக்கள் கூட்டம் இல்லாதது கடைக்காரர்களுக்கு பெரிய நஷ்டத்தை அளித்துள்ளது.

ஹு யி லிங் என்ற 70 வயது பெண்மணி சைனாடவுன் பகுதியில் குழந்தைகள் பொம்மைகளை விற்கும் கடையை நடத்தி வருகிறார். வியாபாரம் மந்தமாக உள்ள நிலையில் தனது வாடகை மற்றும் மின்கட்டணத்தை செலுத்தவே கடினமாக உள்ளதாக அவர் கூறினார்.

Related posts