TamilSaaga

ஹாலிவுட் பட பாணியில் நடந்த Chasing.. Tuas சோதனைச்சாவடியில் சிக்கிய “இரண்டு வெளிநாட்டினர்” – “Wanted Listல்” இருந்த ஓட்டுநரை அலேக்காக தூக்கிய ICA

சிங்கப்பூரின் Tuas சோதனைச்சாவடி வழியாக அத்துமீறி சிங்கப்பூருக்குள் நுழைய முயற்சித்த இரண்டு வெளிநாட்டினர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்களுக்கான தானியங்கி கவுண்டர் மூலம் அதிவேகமாக உள்ளே நுழைய அவர்கள் முற்பட்டபோது clearance counter மீது கார் மோதி கார் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அன்று சிங்கப்பூரில் திக்குத் தெரியாமல் தவித்த நாட்கள்.. “அள்ளிக் கொடுத்து” காப்பாற்றிய “தெய்வத் தாய்” – 11 வருடங்கள் கழித்து “காலில் விழுந்து கும்பிட” தேடும் வெளிநாட்டு ஊழியர்

இந்த சம்பவத்தில் சிதைந்த சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார், மேலும் அவரது இரு பயணிகளும் (ஒரு ஆண் சீன நாட்டவர் மற்றும் ஒரு பெண் வியட்நாம் நாட்டவர்) கைது செய்யப்பட்டனர்.

நேற்று வெள்ளியன்று (ஏப்ரல் 8) அதிகாலை 2.14 மணியளவில், மலேசியாவின் சுல்தான் அபு பக்கர் வளாகத்தின் அருகே இருந்த Departure Clearance பகுதியில் நிறுத்தாமல் அந்த வாகனம் வேகமாக கடந்து செல்ல, மலேசிய அதிகாரிகள் அந்த காரை விரட்டிப்பிடிக்க பின் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் Tuas சோதனைச்சாவடியை அந்த கார் நெருங்குவதை கண்ட ஒரு அதிகாரி அவசரகால சமிக்கையை பயன்படுத்தி அந்த கார் தொடர்ந்து செல்லாமல் தடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அந்த கார் Clearance கவுண்டர் அருகே மோதி கவிழ்ந்ததில் சிங்கப்பூர் ICA அதிகாரி ஒருவருக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது, வாகனத்தில் இருந்த இரு பயணிகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது சிங்கப்பூர் துணை காவல்துறை அதிகாரிகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர், ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். விபத்தில் காயமடைந்த ICA அதிகாரி மற்றும் காரில் பயணித்த அந்த வியட்நாம் பெண் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

5000… 70,000… Dormitories-களில் வசிக்கும் ஹிந்து மற்றும் இஸ்லாமிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு “Surprise Gifts” – சிங்கப்பூர் HEB அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விசாரணையில் அந்த இரண்டு பயணிகளும் சரியான பயண ஆவணங்களை வைத்திருக்கவில்லை என்றும், பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் ICA தெரிவித்துள்ளது. மேலும் வாகனத்தின் ஓட்டுநர் ஏற்கனவே மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும், ஆரம்பகட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts