TamilSaaga

“எங்களை NDP2021 க்கு அழைத்தது கவுரவமாக உள்ளது” சிங்கப்பூர் பள்ளி ஆசிரியர் பெருமிதம் – MOE பதிவு

சிங்கப்பூரில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு தேசிய தின நிகழ்ச்சிகள் அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. தேசிய தின அணிவகுப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஒரு சடங்க அணிவகுப்பு மட்டுமே கடந்த ஆகஸ்ட்.09 அன்று நடைபெற்றது. இந்த ஆண்டின் மெய்நிகர் தேசிய தின அணிவகுப்புக்கு கான் எங் செங் பள்ளிக்கு அழைப்பு வழங்கப்பட்டது.

சிங்கப்பூரின் கான் எங் செங் பள்ளியைச் சேர்ந்த திரு கீத் லிம் கூறுகையில், “இந்த ஆண்டு மெய்நிகர் #NDP2021 இன் ஒரு பகுதியாக எங்களை அழைத்தபோது நாங்கள் உற்சாகமாகவும் கவுரவமாகவும் இருப்பதாக தெரிவித்தார். திரு லிம் உயிரியல், வேதியியல் மற்றும் லோயர் செகண்டரி சயின்ஸ் ஆகியவற்றைக் கற்பிக்கிறார். மேலும் பள்ளியில் ஆண்கள் பிரிகேட் (பிபி) நிறுவனத்தை மேற்பார்வையிடுகிறார்.

இதில் முக்கிய சிறப்பம்சமாக சிறுவர்கள் கடந்த ஆண்டுகளை விட குறைந்த கால அளவில் மேம்பட்ட தகுதிகளுடன் இயக்கங்களில் தேர்ச்சி பெற்றனர். “NDP க்கு மேம்பட்ட இயக்கங்கள் தேவையில்லை என்றாலும், அந்த அளவு தேர்ச்சி பெற்றிருப்பது சிறுவர்களின் நம்பிக்கையையும் அவர்களின் திறனையும் மேம்படுத்துகிறது.” எனவும் அவர் தெரிவித்தார்.

தங்கள் பள்ளி இந்த மெய்நிகர் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்வதை பற்றி மிகவும் நெகிழ்ச்சியுடன் பெருமிதமாக திரு.லிம் பேசினார். இவரது கருத்துக்களை கல்வி அமைச்சகம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.

Related posts