TamilSaaga

காவல் நிலைய வாசலில் தீமூட்டிய இளைஞர் – 3 ஆண்டுகள் சிறை 9 பிரம்படி தண்டனை விதிப்பு

காவல் நிலையத்தின் அருகில் தீமூட்டியதற்கும் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகளை உடைத்து உள்பட சில குற்றங்களை புரிந்த ஆடவர் ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 9 பிரம்பாடிகளும் தற்போது சிங்கப்பூரில் விதிக்கப்பட்டுள்ளது.

சிவப்பிரகாஷ் மயில்ராவணன் என்னும் அந்த 31 வயது வாலிபர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அக்கம்பக்கக் காவல் நிலையத்தில் பிரச்சினை செய்துள்ளார். மேலும் அந்த காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள சுவர்களில் தகாத வார்த்தைகளை அந்த இளைஞர் எழுதியுள்ளார்.

மேலும் அந்த குற்றத்தை புரிந்தபோது அந்த இளைஞருக்கு மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் அந்த இளைஞரை மீண்டும் சமூகத்தில் இணைப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும்.

அவரை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் மனநல மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தின் அருகே தீமூட்டி தீங்கு ஏற்படுத்திய குற்றத்திற்காக சிவபிரகாஷுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 9 பிரம்பாடிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts