TamilSaaga

37 கோடி பம்பர் பரிசு.. சிங்கப்பூர் TOTO லாட்டரி நாளை (அக்.13) குலுக்கல் – ஜெயித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்!

லாட்டரி என்பது பலரது வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றக்கூடிய ஒரு மேஜிக் தான். ஆனால், அந்த மேஜிக் அவ்வளவு சீக்கிரத்தில் பலிக்காது. எனினும், குருட்டு அதிர்ஷ்டத்தில் அந்த மேஜிக் நிகழ்ந்துவிட்டால் வாழ்க்கையே மாறிவிடும்.

சிங்கப்பூரில், அப்படியொரு மாற்றத்துக்காக, அதிர்ஷ்டத்துக்காக பலர் இன்னமும் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை (அக்.13) வியாழக்கிழமை இந்த வாரத்துக்கான இரண்டாவது TOTO குலுக்கல் நடைபெற உள்ளத்து. சரியாக மாலை 6.30 மணிக்கு இந்த குலுக்கல் நடைபெறும். வழக்கம்போல பொதுமக்கள் முன்னிலையில் இந்த TOTO Draw குலுக்கல் நடைபெறும்.

மேலும் படிக்க – “எவ்வளவு திமிர்”! சிங்கப்பூரில் டிராஃபிக் போலீஸை… அப்படியே இழுத்துப் பிடித்து தரதரவென காரில் இழுத்துச் சென்ற நபர்.. வெளியான வீடியோ

இந்த முறை முதல் பரிசு $4,500,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 37 கோடி. லாட்டரியில் ஜெயிப்பது என்பது முற்றிலும் அதிர்ஷ்டத்தை சார்ந்ததே. ஆகவே இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளாமல் விளையாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்னதாக, நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடந்த குலுக்கலில் முதல் பரிசான 2,806,850 டாலரை ஒருவரும் வெல்லவில்லை. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 37 கோடிக்கான பம்பர் பரிசை வெல்லப் போகும் நபர் யார் என்பது தெரியவில்லை.

நீங்கள் லாட்டரி வாங்கியிருந்தால், உங்களுக்கும் ஆல் தி பெஸ்ட்!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts