TamilSaaga

சிங்கப்பூரில் Process Sectorல் பணிபுரியும் இந்தியர்கள்.. கம்பெனி மாறிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு – நாளை (ஜூலை 1) முதல் அமலாகும் புதிய Rule

சிங்கப்பூரில் Process Sectorல் ஏற்கனவே பணிபுரிந்த ஊழியர்களை சிங்கப்பூரை விட்டு வெளியேறாமல் அவர்களை தற்போது மீண்டும் சிங்கப்பூரிலேயே வேலைக்கு அமர்த்த முடியும். இதற்கான வழிமுறை சிங்கப்பூரில் நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகின்றது.

இதன்படி நாளை ஜூலை 1, 2022 முதல், பெருந்தொற்றுக்கு முன் நடைமுறையில் இருந்த நிலை போல இல்லாமல் Process Sectorல் பணி அனுமதி (Work Permit) காலாவதியாகும் நிலையில் அதாவது அதிகபட்சம் 40 முதல் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன் அந்த தொழிலாளர்களை இங்குள்ள புதிய முதலாளிகள் வேலைக்கு அமர்த்த முடியும்.

சிங்கப்பூரில் கொடூரமாக கொல்லப்பட்ட பணிப்பெண்.. கொலையாளி காயத்திரி போட்ட கருணை மனு – சிங்கை நீதிமன்றம் அதை ஏற்றதா?

சரி யாரெல்லாம் இதற்கு தகுதியானவர்கள்?

தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் Process Sectorல் உள்ள ஊழியர்களில் NTS, NAS மற்றும் PRC ஆகிய வகையின் கீழ் வரும் நாடுகளை சேர்ந்தவர்கள் இதற்கு தகுதி பெறுவர்கள்.

அது என்ன NTS, NAS மற்றும் PRC

NTS என்பது Non-Traditional Sources ஆகும், இந்த வகையின் வரும் நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பங்களாதேஷ், மியான்மார் மற்றும் பிலிப்பைன்ஸ்.

NAS என்பது North Asian Sources என்பதாகும், இந்த வகையில் வரும் நாடுகள் ஹாங் காங் (HKSAR Passport), மக்காவு, சவுத் கொரியா மற்றும் தைவான்.

PRC என்பது Peoples Republic of Chinaவை குறிக்கின்றது.

ஆகவே மேற்குறிப்பிட்ட வகையை சேர்ந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து Process Sectorல் பணிபுரிபவர்கள் 40 முதல் 21 நாட்களுக்கும் காலாவதியாகும் Work Permitல் இருந்தால் அவர்களை தங்கள் நிறுவனத்திற்கு மாற்ற முதலாளிகள் ஆவணம் செய்யலாம்.

நாளை (ஜூலை 1) முதல் CMP பெர்மிட்டில் சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு.. சிறப்பான சலுகையை அறிவித்த சிங்கை – ஒரு Detailed Report

சரி சிங்கப்பூரில் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது முதலாளிகளுக்கு எந்த விதத்தில் உதவும்?

ஏற்கனவே சிங்கப்பூரில் பணிபுரிந்தவர் என்றார் நல்ல அனுபவம் வாய்ந்த பயணியாளராக இருப்பார். மேலும் புதிய தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான செலவை இதன் மூலம் குறைக்கமுடியும்.

இது குறித்த கூடுதல் விவரங்களை தெளிவாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Related posts