TamilSaaga

“எவ்வளவு கூப்பிட்டும் கண்விழிக்கவில்லை” : சிங்கப்பூரில் காரில் சடலமாக கிடந்த 67 வயது ஓட்டுநர் – போலீசார் விசாரணை

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் zaobao.com.sg என்ற செய்திநிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஜனவரி 29, 2022 சனிக்கிழமையன்று, பிளாக் 117 பெடோக் ரிசர்வாயர் சாலையில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் 67 வயதான டாக்சி ஓட்டுநர் ஒருவர் அவரது காருக்குள் அசைவற்ற நிலையில் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் அந்த முதியவரை பரிசோதத்தினர், அப்போது அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

மனைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் – வெளியே சொல்ல முடியாத இன்னல்கள் – இது உண்மையா?

அந்த பகுதிக்கு அருகாமையில் வசிப்பவர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் காரில் இருந்த டாக்ஸி டிரைவரைக் கண்டுள்ளார், மேலும் அவரை எழுப்ப முயன்றபோது அவர் எழவில்லை என்று கூறப்படுகிறது. ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த அந்த நபர் உடனடியாக போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்தபோது முதலில் போலீஸ் அதிகாரிகள் அந்த டாக்ஸியை சுற்றி நின்றுகொண்டிருந்தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தான் மருத்துவ குழு அந்த இடத்திற்கு வந்து அவர் உயிரிழந்ததை அறிவித்தனர்.

சிங்கப்பூர்.. அதிகாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ : இரு பெண்கள் மருத்துவமனையில் – 73 வயது முதியவர் கைது – ஏன்?

முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபட்டிருப்பதாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தார். ஆனால் விசாரணை மேற்கொண்டு நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தனிமையில் வீட்டில் இருக்கும் முதியவர்கள் இறந்து பல நாட்கள் ஆகிய பிறகு மீட்கப்பட்ட கதைகள் சிங்கப்பூரில் நிறைய உண்டு. 67 வயதில் தற்போது இறந்துள்ள இந்த டாக்ஸி ஓட்டுநர் நிலையும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts