TamilSaaga

சிங்கப்பூரில் 600 வெள்ளி சம்பளம்.. 14 மணிநேர வேலை? : நான்கு விரல்களை இழந்த பெண் – நடந்து என்ன?

சிங்கப்பூரில் சமையல் உதவியாளராக இரட்டிப்பாக வேலை வாங்கப்பட்ட வீட்டு உதவியாளர் ஒருவர், இறைச்சி அரைக்க பயன்படுத்தும் இயந்திரத்தில் பணி செய்தபோது அதில் ஏற்பட்ட விபத்தில் தனது நான்கு விரல்களை இழந்துள்ளார். இதனால் ஸ்டால் ஆபரேட்டர் லிம் ஷெங் சாங், (இப்போது 59 வயது) அந்த தொழிலாளியின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதால், இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) அவருக்கு இரண்டு வார சிறை மற்றும் 19,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரர் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அவரது ஸ்டால் பற்றிய விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து திருத்தியமைக்கப்பட்டுள்ளன. மியான்மர் நாட்டைச் சேர்ந்த சு சு மார் தனது மகள் லிம் சாக் ஹாங் (36) என்பவரால் வேலைக்கு அமர்த்தப்பட்டார் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அவர் தனது மகளுக்காக இங்கு வேலை செய்யவில்லை.

மனிதவள அமைச்சகம் அதிகாரிகள் முகமது ரியாசுதீன் மற்றும் லோ ஷி ஹூ ஆகியோர் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடுகையில் திருமதி சு சு மார் லிம் ஷெங் சாங் மற்றும் அவரது மனைவி மேடம் கோ சீவ் இம் (59) ஆகியோருடன் 2017ன் பிற்பகுதியில் இருந்து தங்கியிருந்தனர். வீட்டு வேலைகளை செய்ய அந்த தம்பதி அந்த பணிப்பெண்ணிடம் கூறியுள்ளனர். மேலும் கோ தனது கணவரின் உணவு ஸ்டால் வணிகத்திற்கான தயாரிப்பு வேலைகளை செய்ய திருமதி சு சு மார் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாதந்தோறும் 600 வெள்ளி சம்பாதித்த அந்த பெண்மணி, கிட்டத்தட்ட தினமும் அதிகாலை 2 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்தபோதிலும், அந்த வேலைக்கு அவர் கூடுதல் ஊதியம் எதுவும் பெறவில்லை. இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது: காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை வேலையை மீண்டும் தொடங்குவதற்கு முன், காலை 2 மணியளவில் குற்றம் சாட்டப்பட்டவரின் உணவு ஸ்டால் வியாபாரத்திற்காக வீட்டில் வேலை செய்ய ஆரம்பிப்பது, காலை 7 மணி முதல் 9.30 வரை ஓய்வு எடுப்பது பாதிக்கப்பட்டவரின் வழக்கமாக இருந்துள்ளது என்றார்கள்.

Related posts