TamilSaaga

சிங்கப்பூரில் வாக்குவாதத்தில் ஆரம்பித்து கத்திக்குத்தில் முடிந்த சண்டை… கடைத்தெருவங்கும் விசிறி எறியப்பட்ட பொருட்கள்!

சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் கடைத்தெருவில் நேற்று மாலை நடந்த சண்டையில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டிசம்பர் 20ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் பிரபல கடைக்கு முன்னால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூவரும் வாக்குவாதம் முற்றியதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.பெண்கள் இருவரும் 53 வயது மற்றும் 55 வயது உடையவர்கள் ஆவர்.இருவரும் சகோதரிகள் என தெரியவந்துள்ளது இவர்களை தாக்கிய ஆணிற்கு 61 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது .

இவர்கள் சண்டையில் முதலில் கடையில்உள்ள பொருட்கள் அனைத்தும் கடைத்தெருவெங்கும் சிதறி கிடந்தன. ஒருவர் ஒருவர் தாக்கிக் கொண்டதில் ரத்தம் சொட்டிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக 30க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கியுடன் அப்பகுதிக்கு குவிந்தனர் .

பின்பு மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் சண்டையில் கத்தியை பயன்படுத்திய காரணத்திற்காக சம்பந்தப்பட்ட ஆண் சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்பட்டார்.முன்விரோதம் காரணமாக இந்த சண்டையானது நடைபெற்றுள்ளது எனவும் வேறு எந்த காரணம் இல்லை எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts