TamilSaaga

Breaking : “சிங்கப்பூர் to திருச்சி” : Indigo சேவையில் சிக்கல் – 4 மணிநேரமாக விமானத்திற்குள் காத்திருக்கும் பயணிகள், சாங்கியில் இருந்து Live Report

சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் Omicron பரவல் காரணமாக சுமார் ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த தடுப்பூசி பயணப்பாதை (VTL) மீண்டும் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கியது. ஆனால் இந்த சேவையிலும் குறைந்த பட்சமான பயணிகளே சிங்கப்பூர் வர நமது அரசு அனுமதி அளித்து வருகின்றது. இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும், குறிப்பாக தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானங்கள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக விமான சேவை நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டு வந்தது.

சிங்கப்பூரில் கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் : “நீதிமன்றம் செல்லும் நேரத்தில் மர்மமான முறையில் மரணம்” – துப்பறியும் போலீசார்

ஆனால் இந்த ரத்து எல்லாமே முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டு வந்தத, பயண தேதிக்கு முன்பாகவே SMS, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக இந்த தகவல்களை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை நமது சாங்கி விமான நிலையத்தில் இருந்து திருச்சி புறப்படவிருந்த Indigo விமான சேவை தாமதமாகியுள்ளது. இன்று அதிகாலை பயணிகள் அனைவரும் எல்லா பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு விமானத்திற்குள் ஏற்றப்பட்டனர். முதலில் 30 நிமிடங்கள் விமான பயணம் தாமதமாகும் என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் சுமார் 4 மணி நேரமாக பயணிகள் விமானத்திற்குள்ளே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Indigo நிறுவனத்தில் செயல்பாட்டில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விமானம் நேரடியாக திருச்சி செல்லாமல் மாற்றாக கொல்கத்தா வழியாக இன்று மாலை திருச்சி சென்றடையும் என்று கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. திருச்சி நேரப்படி இன்று பிப்ரவரி 5ம் தேதி காலை 6 மணிக்கு சென்றடைய வேண்டிய விமானம், சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணி வரை இங்கிருந்து புறப்படவில்லை.

சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் வேலை செய்யாததற்கு தந்தை முகத்தை வீங்க வைத்த நபர்.. தாய் நிலைமை இன்னும் மோசம்

இந்த காலதாமதத்தால் பயணிகள் உரிய நேரத்தில் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த விமானம் எப்போது திருச்சி விமான நிலையம் வந்தடையும் என்பது இன்னும் நிச்சயமாக அறிவிக்கப்படவில்லை. சாங்கி விமான நிலையத்தில் இருந்து நமது தமிழ் சாகா செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த பிரத்தியேக செய்தி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக வந்த தகவலின்படி சிங்கப்பூர் நேரப்படி காலை 9.45 மணிக்கு மீண்டும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விமானம் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு புறப்படவில்லை. சுமார் 4 மணி நேரமாக பயணிகள் விமானத்திற்குள் இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

News Source

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts