TamilSaaga

நம்ப முடியாத கனவு.. சப் கலெக்டரான பிரபல நடிகரின் மகன்! எந்த மாவட்டம் தெரிஞ்சா வாயடைத்து போய்டுவீங்க

பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டர் ஆகியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75-வது இடத்தை பிடித்து அசத்தியிருந்தார்.தற்போது அவர் உதவி மாவட்ட ஆட்சியர் பயிற்சியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பொதுவாக நடிகர்களின் மகன், மற்றும் மகள்கள் திரைத்துறையை தேர்வு செய்வது தான் வழக்கமாக இருந்துள்ளது. அந்த வழக்கத்தையே மாற்றி தனி பாதையில் பயணித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், குணச்சித்திர நடிகர், காமெடியன், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் சின்னி ஜெயந்த்துக்கு எத்தனையோ விருதுகள் வந்தாலும் தனது மகனாலும் கிடைத்திருக்கும் இந்த பெருமை காலத்தால் அழியாதது.

ஒருமுறை தனது அப்பா குறித்து ஸ்ருதன் கொடுத்த பேட்டியில், தான் என்னவாக விரும்புகிறேன் என்பதை தேர்வு செய்து படிக்க, பெற்றோர் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும், தமிழகத்தின் வலிமைகளான கல்வி, சுற்று சூழல், தொழில்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியிருந்தார்.

Related posts