TamilSaaga

பத்து ஆண்டுகளாக வெளிநாட்டில் கூலி வேலை.. பல சுமைகளோடு போராடி வந்த தந்தை – ஒரே நாளில் லட்சாதிபதியான இந்தியர்

சிங்கப்பூர் உள்பட பல உலக நாடுகளில் இந்தியர்கள் பணி செய்து வருகின்றனர், பல தொழிலாளிகள் கூலித்தொழில் செய்து கூட தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமீரகத்தில் (UAE) கூலி வேலை செய்து வரும் 44 வயதான இந்திய தொழிலாளி அங்கு நடந்த 86வது Mahzooz டிராவில் 1,00,000 திர்ஹாம் (ரூ 21,74,933) வென்று அசத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 23, சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர நேரலை டிராவில் வெற்றி பெற்ற ஆறு எண்களில் ஐந்து எண்களை பொருத்தி அவர் இந்த டிராவில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அந்த இந்தியரின் பெயர் ராம்நாகினா டிப்நாராயண் கேவட்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராம்நாகினா, கடந்த பத்து வருடங்களாக துபாயில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார், உண்மையில் இந்த டிராவில் வெற்றி பெற்றதில் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தண்ணீரில் பட்டாலும் நனையாத சிங்கப்பூர் டாலர்கள்.. ஆனா அதுக்கு ஒரு ரகசிய காரணம் இருக்கு – சிங்கை நாணயங்களில் ஒளிந்திருக்கும் பல ஆச்சர்யங்கள்!

ஊடங்களிடம் பேசிய அவர் “எனக்கு நிறைய அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார், மஹ்சூஸைப் பற்றி எனது சகாக்கள் மூலம் அறிந்து கொண்டேன். கடந்த ஜனவரி 2022 முதல் நான் அடிக்கடி டிராவில் பங்கேற்று வருகிறேன், ஆனால் இவ்வளவு பெரிய பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்றார்.

“நான் வெற்றி பெற்றதை அறிந்ததும் என்னால் சரியாக தூங்கக்கூட முடியவில்லை. இந்தப் பணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும், இந்த நம்பமுடியாத பரிசுக்காக மஹ்சூஸுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts