TamilSaaga

“மலேசியா – சிங்கப்பூர் தண்ணீர் விலை மறுஆய்வு” : பெருந்தொற்றுக்கு பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை – மலேசிய அமைச்சர்

இரு நாடுகளிலும் இந்த பெருந்தொற்று நோய் நிலைமை “முழுமையாக குணமடைந்தவுடன்” மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே, மூல நீரின் மீளாய்வுக்கான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று மலேசியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மேன் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட (செப்டம்பர் 21) அறிக்கையில் தெரிவித்தார்.

கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சைவர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பாராளுமன்ற கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் புத்ராஜெயா பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் கூறினார்: “மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான தண்ணீர் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளை உள்ளடக்கியது”, “எனவே, இந்த விவகாரம் வெளியுறவு அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

“இருப்பினும், மலேசியாவின் நீர் விலைகளை மறுபரிசீலனை செய்வது குறித்த நிலைப்பாடு மிகவும் தெளிவானது மற்றும் நிலையானது, இதில் மலேசியா 1962 ஜோகூர் நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டபடி சிங்கப்பூருக்கு விற்கும் மூல நீரின் விலையை திருத்தும் உரிமையை தக்க வைத்துள்ளது.” என்றும் அவர் கூறினார். திரு துவான் இப்ராகிம் ஜூலை 2018 முதல் இரு நாடுகளும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அதிகாரிகள் டிசம்பர் 2, 2019 மற்றும் ஜனவரி 30, 2020 ஆகிய தேதிகளில் “மூல நீரின் விலையை மறுபரிசீலனை செய்வது தொடர்பான வளர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்” என்று அமைச்சர் கூறினார்.

“பெருந்தொற்றுநோய் பரவுவதால் 1962 ஜோகூர் நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீரின் விலையை திருத்துவது குறித்து இரு அரசாங்கங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் நிலைமை முழுமையாக குணமடைந்த பிறகு விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும், ”என்று அவர் மேலும் கூறினார்.

Related posts