TamilSaaga

கட்டுமானத்துறையில்  தங்களை மேம்படுத்திக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு

நீங்கள் சிங்கப்பூரில் கட்டிடம் மற்றும் கட்டுமான துறையில் பணிபுரிபவரா? எனில் இது உங்களுக்கான பதிவு

சிங்கப்பூர் அரசின் BCA, கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன்  மேம்பாட்டிற்காக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு,  கட்டுமான துறையில்   வேலைக்கு   செல்பவர்கள் இந்த திட்டத்தின்  மூலம் உடனடியாக  வேலை வாய்ப்பு  பெறலாம்.  ஏற்கனவே  கட்டுமான துறையில்  பயிற்சி பெற்று  சிங்கப்பூருக்கு   வருவோருக்கு  தகுதி தேர்வின் மூலம்  வேலை அளிக்கப்படும்

இந்த தகுதி தேர்வின் மூலம் வேலை பெறுபவர்கள், தாங்கள் பெற்ற தகுதி சான்றிதழை இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பயன்படுத்திக் கொள்ளலாம் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).

BCA நான்கு விதமான பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் தங்களுக்கு பொருத்தமான பயிற்சியை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்

Multi-Skilling Scheme

இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் பயிற்சி பெற்ற அல்லது அனுபவமிக்க தொழிலாளர்களை ஒன்றிற்கும் மேற்பட்ட பணியில் அமர்த்தலாம். இதனால் வேலையில்லா நேரத்தை குறைப்பது மட்டுமின்றி உற்பத்தி திறனையும் அதிகப்படுத்தலாம். இது போன்ற பன்முகத்திறமை கொண்ட தொழிலாளர்களை அமர்த்துவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Direct R1 Pathway

உள்ளூர் கட்டுமான அனுபவம் இல்லாத தொழிலாளர்களையும் இந்த திட்டத்தின் கீழே நீங்கள் பணியமர்த்தலாம் . அவர்கள் SEC(K) எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த Direct R1 தகுதி நிலை 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுபவர்களுக்கு சராசரியாக மாத வருமானம் $1,600 என அறிவித்துள்ளது

இந்த திட்டம் குறிப்பாக இந்தியாவில் பயிற்சி பெற்று வேலைக்காக சிங்கப்பூருக்கு வருவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

CoreTrade Scheme

இந்தத் திட்டத்தின் மூலம் மிகவும் பயிற்சி பெற்ற கைதேர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது மேலும் பணியாளர்களின் எண்ணிக்கையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தரம் மற்றும் உற்பத்தி நிலையை உயர்த்தலாம். இந்த திட்டம் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Market-Based Skills Recognition Framework

MOM and BCA இணைந்து ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இதன் மூலம் R2 பணியாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள கொண்டு R1 தகுதியை பெறலாம். இந்த திட்டத்தின் நோக்கம் ஏற்கனவே பணிபுரிந்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இது உதவும். இதற்கு தாங்கள் குறைந்தபட்சம் சிங்கப்பூரில் ஆறு வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்.

Accelerated Learning Programme (ALP) and Enhanced Direct R1 Pathway

MOM and BCA இணைந்து மலேசியாவில் இருந்தும் மற்றும் வட ஆசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கட்டுமான துறையில் வேலைக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

இது ஒரு நாள் பயிற்சி, பயிற்சியை முடித்த பிறகு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு நான்கு முதல் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்டு தொழிலாளர்களின் திறன்களை அறிந்து அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

MOM and BCA ஏற்கனவே தொழிலாளர்கள் பெற்று இருக்கும் சான்றிதழ்களுக்கு மதிப்பு அளிக்கப்படும்.

மேலே அறிவித்துள்ள புதிய திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து கட்டுமான துறைக்கு வேலைக்கு வருபவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் கட்டுமான துறையில் வேலை வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கும்.

நீங்கள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல விரும்புவோர் எனில் குறிப்பாக கட்டுமான துறையில் வேலை எதிர்பார்ப்பவரெனில். மேற்கண்ட திட்டங்களை பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெற ஓர் அரிய சந்தர்ப்பம்.

தற்போது செயல்திறன் மிக்க தொழிலாளர்களை சிங்கப்பூர் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது . இது தொழிலாளர் மற்றும் பணியாளர் இருவரும் வளர்ச்சி அடையும் தக்க தருணம், எனவே தோழர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Related posts