TamilSaaga

சிங்கப்பூரில் ஊழியர் மீது கொதிக்கும் சூப்பை வீசிய அதிகாரி – “தொழிலாளி-னா அவ்வளவு இளக்காரமா போச்சா?”

சிங்கப்பூரில் கெல்வின் டான் சுன் லாங் என்ற 28 வயது நபர், தனது ஆர்டரை தவறாகப் பெறப்பட்டதை அடுத்து, ஒரு வணிகர் மீது சூடான சூப்பை வெஸ்ஸியதற்காக S$5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 13, 2021 அன்று தனது மோசமான செயலால் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் டான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், இறுதியில் பிப்ரவரி 18, 2022 அன்று அபராதம் விதிக்கப்பட்டார்.

“சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் உடனடியாக தேவை” – வெளிப்படையாக அறிவித்த MOH – வெளிநாட்டு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாமா?

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் (SAF) வழக்கமான மற்றும் கேப்டனான அவர், தற்போது தனது பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) ST-யிடம் தெரிவித்துள்ளது. அவருடைய இடைநீக்க நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு தற்போது மறுஆய்வு செய்யப்படுகிறது. ST பார்த்த நீதிமன்ற ஆவணங்களில், உட்லண்ட்ஸ் டிரைவ் 71ல் உள்ள ஒரு காபி ஷாப் கடையில் மதியம் 1 மணியளவில் டான் தனது ஆர்டரைப் போட்டிருந்தார். அதேநேரத்தில் மற்ற ஸ்டால்களில் இருந்து ஆர்டர்களை எடுத்துச் செல்லவும் அவர் முன்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு டான் ஸ்டாலுக்குத் திரும்பியபோது, அங்கு தான் ஆர்டர் செய்திருந்த உனக்கு பதிலாக சற்று மாறுதலான உணவை வியாபாரி தயார் செய்திருப்பதைக் கண்டுபிடித்தார். இதனால் அதிருப்தி அடைந்த டான், 53 வயதான அந்த சிங்கப்பூர் பெண்ணிடம், தனது உணவை மீண்டும் தயார் செய்யுமாறு தெரிவித்துள்ளார். ஆனால், உணவு ஏற்கனவே சமைக்கப்பட்டுவிட்டதால் அவர் அதை மீண்டு தயார் செய்ய முடியாது என்று பதிலளித்துள்ளார். உடனே அங்கிருந்து அவர் நகரத்து அருகில் இருந்த மேஜையை நோக்கி சென்றதும், டான் ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த சூடான சூப்பை எடுத்து, அதை வியாபாரி இருக்கும் திசையில் வீசினர்.

“என் புருஷன், புள்ளைங்களே என்னை வெறுக்குறாங்க”.. சிங்கப்பூரில் அலட்சிய குணத்தால் 20,000 டாலரை இழந்த அப்பாவி பெண் – “Google Search” மூலம் “விபூதி” அடித்த ஆசாமி

உடனே அந்த இடத்தில் இருந்து புறப்பட அவரை பல வழிப்போக்கர்கள் துரத்தி பிடித்து அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்க கடைக்குத் திரும்ப அழைத்துச்சென்றனர். அன்றைய தினமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. டான் எறிந்த அந்த பை பெண்ணின் உடலில் பட்டது. STயின் கூற்றுப்படி, வியாபாரிக்கு அவரது அடிவயிற்றின் வலது பக்கத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts