TamilSaaga

“அவர் சம்பாத்தியத்தில் தான் குடும்பமே நடக்குது”.. சிங்கப்பூரில் பண்டிகை நேரத்தில் பையை தொலைத்த ஓட்டுநர் – மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு

சிங்கப்பூரில் Aisyah Lim என்ற பேஸ்புக் பயனாளர் ஒருவர் தனது கணவரின் பையை திருடப்பட்டதாக முகநூல் வழியாக முறையீடு செய்துள்ளார். போலீசார் அளித்த தகவலின்படி Aisyah Lim என்ற அந்த பெண்ணின் கணவரின் பெயர் முஹம்மது நஸ்ரீன் பின் ரைமி.

Gojek ஓட்டுநரான அவர் கடந்த ஏப்ரல் 26ம் தேதி இரண்டு பயணிகளை ஏற்றி சென்றபோது அவர் காரில் வைத்திருந்த பேக்கைக் காணவில்லை என்று அவரது மனைவி கூறியுள்ளார். அந்த பையில் அவரது பணப்பை, கார் சாவி, வீட்டு சாவி, NRIC, மூன்று வங்கி அட்டைகள், பர்ஸ் மற்றும் S$526 பணம் இருந்தது என்று கூறியுள்ளார்.

ஹரி ராய விழாக்கள் நெறுங்கி வரும் இந்த நேரத்தில் குடும்பம் முழுவதும் “மிகவும் கடினமான சூழலில் உள்ளது” என்று லிம் அந்த பதிவில் கூறினார். தனது கணவரின் வருமானத்தை நம்பியே தங்களுடைய குடும்பம் இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

புலம்பெயர் தொழிலாளர்களே இனி பார்த்து செலவு செய்யுங்கள்.. சிங்கப்பூரில் அதிகரிக்கும் பணவீக்கம் – மேலும் விலைவாசி உயர வாய்ப்பு!

தங்களுடைய இரு சிறு குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை கொடுக்க இரவு பகல் பாராது தனது கணவர் வாகனம் ஓட்டுகிறார் என்றும் அவர் கூறினார்.

மேலும் தனது பதிவின் முடிவில், “தனது கணவரின் பையை எடுத்த நபருக்கு எங்களை விட அது அதிகமாக தேவைப்பட்டிருக்கலாம்” என்றும், அது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாகவும் லிம் கூறினார்.

சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழருக்கு நடந்த கொடூர விபத்து – எத்தனை கோடி கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வராது!

இருப்பினும் பை தொலைந்தது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், நிச்சயம் நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts