சிங்கப்பூரில் இன்று ஏப்ரல் 28 அன்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகு, ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை விடியற்காலையில் தூக்கிலிடப்படவிருந்த மலேசிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி தட்சிணாமூர்த்தி கட்டையாவுக்கு தூக்கு தண்டனைக்கு கடைசி நிமிடத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் சமூக ஆர்வலர் கோகிலா அண்ணாமலையின் கூற்றுப்படி, தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது.
தட்சிணாமூர்த்திக்கு ஆதரவாக தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், AGC (Attorney-General’s Chambers) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அதாவது, தட்சிணாமூர்த்திக்கு ஏப்ரல் 29ல் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது.