TamilSaaga

பிப்ரவரி 2 : “இன்று ஒரு அபூர்வ நாள்” – சிங்கப்பூர் முழுவதும் 4D TOTO-களை எடுக்க வரிசையில் காத்திருந்த மக்கள்!

இன்று பிப்ரவரி 02.2022 அதாவது 02.02.2022, இந்த தேதியில் உள்ள ஜீரோகளை எடுத்து விட்டால் அனைத்தும் 2 என்று தான் வருகிறது. இது அபூர்வமாக தோன்றும் ஒரு தேதி என்று கருதப்பட காரணம் இதுபோன்ற ஒரு அபூர்வ தேதியை நாம் பார்க்கவே முடியாது என்பது தான் நிதர்சனம். இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து சில அறிவியல் நிகழ்ச்சிகளும், பல மூடநம்பிக்கைகள் நம்மைத் தொடர்ந்து பீதியடைய செய்து வைக்கிறது. நிச்சயம் 2000மாவது ஆண்டு உலகம் அழிந்து விடும் என்ற ஒரு கட்டுக் கதையை 90களில் பிறந்த குழந்தைகள் கேட்டிருப்பார்கள்.

இந்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட E-Passport : எப்படி பெறுவது? எவ்வாறு உதவும்? – இதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்மை உண்டா?

அதேபோல 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதிக்கு பிறகு மாயன் காலண்டர் முடியவுள்ளதால் உலகம் அழிந்து விடும் என்று பலரும் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு மாயன் காலண்டரில் பல லட்சம் ஆண்டுகளுக்கான நாட்காட்டிகள் இருக்கிறது என்று கூறப்பட்ட பின்னரே மக்களில் பலர் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்றே கூறலாம். இந்த வரிசையில் இன்றைய தினத்தில் எல்லாமே 2 என்றும் வரும் இந்த நிலை இன்னும் இருநூறு வருடங்களுக்கு பிறகு நான் இதேபோல ஒரு தேதி வரும் ஆததால் தான் நாம் இனி இதுபோன்ற ஒரு தேதியை பார்க்க உயிரோடு இருக்கமாட்டோம் என்று கூறப்படுகிறது.

“சிங்கப்பூர், இந்தியா VTL பயணம்” : Service மற்றும் Manufacturing Sectorக்கு மட்டும் அனுமதி அளிப்பது ஏன்? – Exclusive Report

இந்நிலையில் சிங்கப்பூரில் பொதுவாகவே 4D டோட்டோ லக்கி எண்கள் எடுப்பது என்பது ரபலமான விஷயம். அதிலும் இதுபோன்ற ஒரு அபூர்வ தேதியில் அதை எடுப்பது என்றால் அது மேலும் பல சிறப்புகளை கொண்டிருக்கும். இந்நிலையில் இன்று 4D டோட்டோட லக்கி எங்களை எடுக்க சிங்கப்பூர் முழுவதும் பல பூல்ஸ் கிளைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் அதிர்ஷ்டத்தை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts