TamilSaaga

சிங்கப்பூரில் மாதம் 2.5 லட்சம் சம்பளம்.. வருடத்திற்கு 29 லட்சம்.. பெற்று வளர்த்த தாய் தந்தையின் கைகளில் மாதம் 1.5 லட்சம் உறுதி – சிங்கப்பூர் MDIS அறிவிப்பு

இந்த 2022-ம் ஆண்டில் சிங்கப்பூரில் அதிகம் ஊதியம் பெறும் துறைகளின் பட்டியலை சிங்கப்பூர் மேலாண்மை மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாதம் இரண்டரை லட்சம் வரை சம்பளம் பெறும் துறையில் IT இண்டஸ்ட்ரி இடம் பிடித்துள்ளது. நிதித்துறை, வணிகம், மருத்துவம் போன்ற இதர துறைகளை விட இதில் சற்று குறைவான சம்பளம் என்றாலும், ஊருக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சேமித்து அனுப்பக்கூடிய அளவுக்கான ஊதியம் இங்கு கிடைக்கிறது.

இதுகுறித்து MDIS வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் துறையானது, புதிய பட்டதாரிகளுக்கு அதிக ஊதியம் பெறும் துறைகளில் ஒன்றாகும். சிங்கப்பூரில் நீங்கள் அதிக ஊதியம் பெறும் வேலையைத் தேடத் துவக்கினால், இத்துறை சிறந்த தேர்வாக அமையும்.

மேலும் படிக்க – வெட்டிப் பேச்சும் கிடையாது.. வெட்டிக் கூட்டமும் கிடையாது – 44 வருடங்களுக்கே முன்பே “ஒரேயொரு” பாடலில் தமிழகத்தை சிலாகிக்க வைத்த சிங்கப்பூர்!

இந்தத் வேலைக்கு கணினிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருப்பது அவசியம் – மேலும் IT போன்ற ஒரு சிறப்புத் துறையில் நீங்கள் அது தொடர்புடைய பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பல நிறுவனங்கள் புதிய டிஜிட்டல் எதிர்காலத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இது சைபர் செக்யூரிட்டி, நெட்வொர்க்கிங் டெக்னாலஜி மற்றும் டேட்டாபேஸ் சிஸ்டம்ஸ் ஆகிய துறைகளில் தேவைக்கேற்ப திறன்களைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவையை உண்டாக்கியுள்ளது. Salary Explorer3 இன் படி, எத்திகல் ஹேக்கிங் திறன் கொண்ட ஒரு நிபுணர் பொதுவாக மாதத்திற்கு சுமார் $6,800 வருமானம் பெறுகிறார்.

சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய பட்டதாரி, சராசரியாக மாதத்திற்கு $3,005 அல்லது ஆண்டுக்கு $39k சம்பளத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts