சிங்கப்பூரில் உள்ள Rosewood Suits குடியிருப்பில் ப்ளாக் எண் 61ல் உள்ள ஒரு வீட்டில் திடீரென ரசாயனகசிவு ஏற்பட்டதாக நேற்று (ஜூன்.21) காலை 9.30 மணியளவில் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் கசிவு ஏற்பட்ட ப்ளாக் மற்றும் அருகாமையில் உள்ள ப்ளாக்குகளில் வசிக்கும் மக்கள் சுமார் 100 பேரை இடத்தை விட்டு வெளியேற்றினர்.
பின்பு இரசாயன மாதிரையை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் பூச்சிக்கொல்லியில் இருக்கும் ரசாயனம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
பின்னர், துப்புறவு பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, சுமார் 1 மணி நேரம் கழித்து, குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வீட்டிற்குள் அனுமதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.