TamilSaaga

இரண்டு வார பூட்டுதல்.. மீண்டும் திறக்கப்பட்ட Marina Sand Bay – ஆனால் சில கட்டுப்பாடுகள் அமல்

சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் (எம்பிஎஸ்) கேசினோ நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) மீண்டும் திறக்கப்பட்டது. பெருந்தொற்று கிளஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கடந்த ஜூலை 21 அன்று முதல் இரண்டு வாரங்கள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. MBS அதன் கேசினோ மீண்டும் திறப்பதன் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

இதில் விருந்தினர்களுடன் தொடர்பு கொள்ளும் ஊழியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட வழக்கமான சோதனை முறையும் அடங்கும். ஊழியர்கள் தடுப்பூசி நிலை மற்றும் வேலை அபாய விவரத்தைப் பொறுத்து ஒவ்வொரு மூன்று நாட்களிலிருந்தும் ஒவ்வொரு 28 நாட்கள் வரை ஸ்வாப் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“எங்கள் ஊழியர்களிடையே தடுப்பூசி விகிதங்கள் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை எட்டிய நேரத்தில் மீண்டும் திறக்கப்படுகிறது” என்று எம்பிஎஸ் தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சூதாட்ட விடுதியும் 11 பெருந்தொற்று வழக்குகள் கண்டறியப்பட்ட பிறகு ஜூலை 22 முதல் சுத்தம் செய்யும் பணிக்காக 11 நாட்கள் மூடப்பட்டது.

மேலும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு கேமிங் டேபிளிலும் இரண்டு பேட்டர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் ஒவ்வொரு ஸ்லாட் அல்லது எலக்ட்ரானிக் கேமிங் மெஷினிலும் ஒரு புரவலர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். இந்த நேரத்தில் கேசினோ மைதானத்தில் சாப்பிடுவது, குடிப்பது மற்றும் புகைபிடிப்பது போன்ற விஷயங்களுக்கு அனுமதி இல்லை.

Related posts