TamilSaaga

“சிங்கப்பூரில் வேலை தேடி வந்த 13 வயது சிறுமி” : பணத்தாசை காட்டி நாசம் செய்த “காமக் கொடூரன்” – கோர்ட் எடுத்த முடிவு சரிதான்!

சிங்கப்பூரில் 13 வயது சிறுமி தான் வேலை தேடுவதாக இணையத்தில் பதிவிட அதை கண்ட ​​28 வயது இளைஞன் ஒருவர் Flyersகளை (விளம்பர சீட்டுகள்) சேகரித்து விநியோகிக்கும் வேலையை அந்த சிறுமிக்கு வழங்கினார். இறுதியில் அந்த சிறுமியிடம், உன்னை போன்ற வயது குறைந்த சிறுமிகள் பாலியல் சேவை செய்து கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும் என்றும். வெவ்வேறு வகையான பாலினச் சேவைகளுக்கு உனக்கு சேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட உட்புறங்களுடன் சிங்கப்பூரின் முதல் NEL ரயில் – இன்று முதல் தனது சேவையை துவங்கியது!

இந்த படுபாதக செயலை செய்த அந்த கொடூர நபருக்கு நேற்று திங்கள்கிழமை (பிப்ரவரி 28) 52 மாத சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டது. அவரது பெயர் நீதிமன்ற ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டது மற்றும் ஒரு GAG உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டவரின் பெயரையும் நீதிமன்றம் குறிப்பிடவில்லை. மேலும், அவர் செய்த மற்றொரு குற்றத்திற்காக அவருக்கு கூடுதலாக 263 நாட்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

கடந்த நவம்பர் 2, 2019ம் ஆண்டு வேலை தேடும் ஒரு இணைய பதிவின் மூலமாக, குற்றவாளியும் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியும் Carousell செயலி மூலம் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான அடுத்த நாள், அவர்கள் அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சந்தித்துக்கொண்டனர். அப்போது விளம்பர சீட்டுகளை சேகரித்து விநியோகிக்கும் வேலை பற்றி அவர் அச்சிறுமியிடம் கூறியுள்ளார். அந்த சிறுமிக்கு வயது 13 என்றும் Secondary நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி அவரென்றும் அந்த குற்றவாளி அறிந்திருந்தார்.

இந்த நிலையில் தான், உன் போன்ற வயது குறைந்த சிறுமிகள் பாலியல் சேவை செய்தும் அதிக பணம் ஈட்ட முடியும் என்று கூறி தான் அணிந்திருந்த Pantன் ஜிப்பை கலட்டியுள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியுடன் பாலியல் ரீதியாக இணைய அவ்வழியே யாரோ வருவதை அறிந்து அவர்கள் இருவரும் வேறு இடத்திற்கு சென்று மீண்டும் அதே வேலையில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் நீ என் Girl Friendஆக இரு என்று கேட்க அந்த சிறுமியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து நவம்பர் 6, 2019 அன்று மாலை அவர்கள் மீண்டும் புங்கோல் வாக்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியியல் சந்தித்துள்ளனர். ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்த பிறகு, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அவனிடம் செக்ஸ் பற்றி கேட்க, எப்படி அதை செய்வது என்று அவன் சிறுமியிடம் கூறியுள்ளான்.

சிங்கப்பூரில் நீங்கள் கட்டாயம் செய்யவே கூடாத 10 விஷயங்கள்

பல முறை அந்த சிறுமியை பாலியல் ரீதியாக ஊடுருவ இறுதியில் அவனது கொடூர செய்ய வெளிச்சத்திற்கு வந்தது. நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு வந்த பிறகு தான் அவர் ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவனுடைய இந்த செயல் குறித்து யார் போலீசில் புகார் அளித்தது என்பதை நீதிமன்றம் கூறவில்லை.

Related posts