TamilSaaga

“சிங்கப்பூரில் விலங்குகள் காப்பகப் பணியாளருக்கு 13 ஆண்டுகள் சிறை” : 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை

சிங்கப்பூரில் இதற்கு முன்பு “இதேபோன்ற” குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும், HIVயால் பாதிக்கப்பட்ட ஒருவர், 14 வயது சிறுமியுடன் தனது உடல்நிலை குறித்து தெரிவிக்காமல் பாதுகாப்பின்றி உடலுறவு கொண்டுள்ளார். அந்த சிறுமியுடன் நெருங்கி பழகுவதற்காக அந்த ஆண் தான் பணிபுரிந்த விலங்குகள் காப்பகத்தில் அந்த சிறுமியை தன்னார்வத் தொண்டு செய்பவராக சேர்த்துள்ளார். நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட GAG உத்தரவுகள் காரணமாக பெயரிட முடியாத 41 வயதான நபருக்கு நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 13) 13 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : Dormitory காவலருக்கு 24 நாட்கள் ஜெயில்

அவர் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார், பெரும்பாலும் மைனர் ஒருவருடன் பாலியல் ஊடுருவல் மற்றும் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு அவரிடமிருந்து HIV தொற்று ஏற்படும் அபாயத்தை அவரது பாலியல் துணைக்கு தெரிவிக்கத் தவறியது உள்ளிட்டவை அடங்கும். மேலும் 25 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கருத்திக்கொள்ளப்பட்டது.

இதற்கு முன்பு ஒரு கடைத் திருட்டுக் குற்றத்திற்காக நிபந்தனை நிவாரணத் திட்டத்தின் கீழ் அந்த நபர் ஜனவரி 2019 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று நீதிமன்றம் கூறியது. அதன் பிறகு அவர் ஒரு விலங்குகள் காப்பகத்தில் தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கினார், பின்னர் அந்த நிறுவனத்தால் அங்கேயே பணியமர்த்தப்பட்டார். அதன் பிறகு மேற்பார்வையாளர், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு நாய்களை எவ்வாறு பராமரிப்பது எனப் பயிற்சி அளித்து தலைமைப் பயிற்சியாளர் என்ற பதவி உயர்வு பெற்றார்.

இந்நிலையில் தான் ஜூலை 2019ல், பாதிக்கப்பட்ட அந்த 14 வயது சிறுமி தனது அத்தையுடன் அந்த காப்பகத்திற்கு வந்துள்ளார். அந்த சிறுமியின் அடுத்த வருகையின் போது குற்றவாளி அவளை அடையாளம் கண்டுகொண்டு, தன்னார்வத் தொண்டு குழுவில் சேர ஆர்வமாக உள்ளாரா என்று கேட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 2019ல், அந்த நபர் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாதிக்கப்பட்டவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். மேலும் அந்த காப்பகத்தில் அவளது உதடுகளிலும் முத்தமிட்டுள்ளார்.

இதனையடுத்து செப்டம்பர் 2019 தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவரை தனது வீட்டிற்கு அழைத்து, அங்கு அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட் டுள்ளனர்.பின்னர் அவர் உடலுறவு கொள்ள முயன்றபோது வலி இருப்பதாக கூறியதால் நிறுத்தியுள்ளார். இருப்பினும், அவனுக்கு கிடைத்த அடுத்த சந்தர்ப்பத்தில் அந்த சிறுமியுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டார் என்று வழக்கறிஞர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts