TamilSaaga

“தனிமைப்படுத்துதல் காலத்தில் விதி மீறல்” – சிங்கப்பூரில் Dormitory காவலருக்கு 24 நாட்கள் ஜெயில்

மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுக்காக மருத்துவ விடுப்பில் இருந்த நேரத்தில், புலம்பெயர்ந்த ​​தொழிலாளர்கள் தங்குமிடத்தின் பாதுகாப்புக் காவலர் ஒருவர் தனது ஸ்வாப் சோதனை முடிவுகளை நிலுவையில் வைத்துவிட்டு இரண்டு நாள் திறன் படிப்புக்குச் செல்வதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 46 வயதான அவர் பின்னர் தொற்றுக்கு எதிர்மறையாக சோதனை செய்தாலும், அவர் வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்ட ஒரு தங்குமிடத்தில் முன்னணி பணியாளராக இருந்துள்ளார். அதுவும் அந்த நேரத்தில் பெருந்தொற்றின் அதிக ஆபத்துள்ள பகுதியாக அப்பகுதி இருந்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரையே கலக்கு கலக்கும் ஓர் “தமிழ்ப் பெண்”

ஆல்வின் லியோங் ஜிட் லூங்கிற்கு நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 13) 24 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது மற்றும் எதிர்மறையான ஸ்வாப் சோதனை முடிவைப் பெறுவதற்கு முன்பும், அவர் தனது வீட்டை விட்டு வெளியேறியதன் மூலம் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் விதிமுறையை மீறியதாக அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

லியோங் செக்யூரிடாஸ் Guarding Serviceல் ஒரு பாதுகாப்பு அதிகாரி, பயோனீர் நார்த் சன்வியூ வே தங்குமிடத்தில் பணிபுரிகிறார் என்று நீதிமன்றம் கூறியது. கடந்த நவம்பர் 8, 2020 அன்று, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக சிமேயில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிளினிக்கிற்குச் அவர் சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு காய்ச்சல் மற்றும் மேல் சுவாசக்குழாய் தொற்று இருப்பதை உறுதி செய்தார்.

உடனடியாக மருத்துவர் ஸ்வாப் பரிசோதனைக்கு செல்லுமாறும், எதிர்மறையான முடிவு கிடைக்கும் வரை வீட்டிலேயே இருக்குமாறும் அவர் லியோங்கை அறிவுறுத்தினார். லியோங் அந்த நேரத்தில் இதை ஒப்புக்கொண்டார் மற்றும் ஐந்து நாட்களுக்கு அவரை வேலையில் இருந்து விடுவித்து மருத்துவ சான்றிதழை ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 8 முதல் நவம்பர் 12 வரை – அல்லது அவரது நெகட்டிவ் ஸ்வாப் சோதனை முடிவு வெளிவரும் வரை – அவர் தனது MC காலவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளினிக்கை விட்டு வெளியேறிய பிறகு, லியோங் ஒரு ஸ்வாப் பரிசோதனைக்குச் சென்றார், மேலும் எதிர்மறையான முடிவு குறித்த அறிவிப்பைப் பெறும் வரை வீட்டிலேயே இருக்குமாறு அவருக்கு மீண்டும் கூறப்பட்டது.

ஆனால், ஜூரோங் கிழக்கில் உள்ள தேவன் நாயர் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்ப்ளாய்மென்ட் அண்ட் எம்ப்ளாய்பிலிட்டியில் காவலர் மற்றும் ரோந்து (கண்காணிப்பு பாதுகாப்பு அதிகாரிகள்) படிப்பில் கலந்து கொள்வதற்காக லியோங் அடுத்த இரண்டு நாட்களில் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேபோல நவம்பர் 9 அன்று, அவர் காலை 9 மணிக்கு முன்னதாக சிமேயில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, மாலை 6 மணிக்கு Course முடிந்ததும் வீடு திரும்பியுள்ளார் அதுவும் இரு வழிகளிலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts