TamilSaaga

சிங்கப்பூர் புக்கெட் தீமா சாலையில் லாரி மற்றும் பைக் மோதல்…!

சிங்கப்பூரின் புக்கெட் தீமா சாலையில் பைக் மற்றும் லாரி மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நவம்பர் 1-ம் தேதி உட்லண்ட்ஸ் சாலையில் சென்ற பொழுது லாரி ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதால் பைக்கில் சென்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். இளைஞருக்கு 26 வயது தான் ஆகின்றது என்ற தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

அந்த வீடியோவில் பைக்கில் சென்ற இளைஞர் காயமடைந்து லாரிக்கு அருகில் விழுந்து கிடந்ததை ஒட்டி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது பதிவான காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதன் பின்னர் விரைவாக இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.லாரி ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விபத்து நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிங்கப்பூரில் அடிக்கடி விபத்து நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தாலும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதன் விளைவாக தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. வேலைக்காக இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று டிரைவர் வேலை செய்யும் இளைஞர்கள் அதிகம் உள்ளதால் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள்.உங்களது எதிர்காலம் மட்டுமல்ல உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் எதிர்காலமும் உங்களிடம் உள்ளது என்பதை மனதில் கொண்டு கவனமாக ஓட்டினால் விபத்துகளை தவிர்க்கலாம்.

Related posts