TamilSaaga

மாணவர்களுக்கான தேசிய தடுப்பூசி திட்டம் கட்டாயமல்ல – சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்

மாணவர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யலாம் என்று கல்வி அமைச்சகம் தற்போது சுட்டிக்காட்டி உள்ளது.

இதனை சுட்டிக்காட்ட காரணம் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லை என்றால், அதனை தெரிவிக்கும் பகுதி விண்ணப்பத்தில் இல்லை. எனவே, தடுப்பூசிக்காக பதிவு செய்யாத மாணவர்களுக்கு இந்த விண்ணப்ப படிவம் அனுப்பப்படுவதால் இதில் விருப்பமில்லாததை தெரிவிக்க பகுதி இல்லை.

இது விருப்பத்தின் பெயரில் பதிவு செய்வதாக இல்லை எனவும் இதனால் சில பள்ளி கல்லூரிகள் விருப்பமின்மையை தெரிவிக்க தனியே கடிதம் கேட்பதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்து மனு அளித்திருந்தனர்.

எனவே மாணவர்கள் தேசிய தடுப்பூசி திட்டத்தில் பங்குகொள்வது விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே என கல்வி அமைச்சகம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

தங்கள் பிள்ளைகளை தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்துவது போல் உள்ளதாக பல பெற்றோர் கவலை தெரிவிப்பதை தொடர்ந்து, கல்வி அமைச்சு மேற்கூறிய வகையில் பதிலளித்துள்ளது.

Related posts