அண்டை நாடான இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தில் 17 வயது பெண் ஒருவர் கருவுற்று இருந்த நிலையில் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக அந்த பெண்ணனை கர்பமாக்கியதாக கூறப்படும் 12 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.
தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தற்போது அந்த சிறுவனை POCSO வழக்கில் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஊடங்கங்களிடம் பேசிய போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததாக அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் உள்ள போலீஸ் அவுட்போஸ்டில் இருந்து தகவல் கிடைத்தது என்று கூறினார்கள்.
விசாரணையில், கூலித்தொழிலாளிகளின் மகளான அந்த 17 வயது இளம் பெண் பல ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான்.
இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக அவர்களிடையே “கள்ள உறவு” இருந்துவந்தது தெரியவந்தது. அடுத்தகட்ட விசாரணையில் அந்த பெண் அந்த கள்ள உறவால் கர்ப்பமானதும் தெரியவந்தது. பெற்றோரிடமும் தான் கர்பமானதை மறைத்த அந்த பெண் ஒரு கட்டத்தில் அந்த உண்மையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பிரசவ வழி அதிகமான நிலையில் அவர்கள் மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 17 வயது சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற நிலையில் அது குறித்து போலீசாரிடம் மருத்துவமனை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
தற்போது POCSO வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அந்த சிறுவன் தற்போது தஞ்சாவூரில் உள்ள ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.