TamilSaaga

குழந்தை பிறப்பதற்காக 2வது திருமணம் செய்த கணவர்.. ஒட்டுமொத்த குடும்பத்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்திய முதல் மனைவி!

அடக்கடவுளே! என்று சொல்ல வைக்கும் சம்பவம் இது. பீகார் மாநிலம் ப்ரவுல் நகரின் ஷேக்பூர் தோலா பகுதியில் வசித்து வந்தவர் முகமது குர்ஷித் ஆலம் (40), அவருடைய மனைவி குல்ஷன் காதுன் (35). இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.

இதனால் குடும்பத்தில் வாரிசு வேண்டும் என்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரோஷன் காதுன் (28) என்ற பெண்ணை முகமது குர்ஷித் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதில், ரோஷன் கர்ப்பம் தரித்தார்.

இதன் காரணமாக, முதல் மனைவிக்கு குல்ஷனுக்கும் இரண்டாவது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அவரது மாமியார் ஜுபைதா காதுன் (65) மீதும் இவருக்கு மனக் கசப்பு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்திருக்கிறது.

இந்த நிலையில், கடந்த மே.14ம் தேதி ஏற்பட்ட குடும்பத் தகராறில் குர்ஷித் ஆலமின் முதல் மனைவி, தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவரது மாமியாரும் 2வது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குல்ஷனும் அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்களும் பலியானார்கள்.

இதையடுத்து போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts