கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூரில் இருந்த பெருந்தொற்று சூழல் என்பது வேறு. கட்டுப்பாடுகள் மிக அதிகமாக இருந்தது. அப்போதிருந்த சூழலில் வெளிநாட்டு ஊழியர்கள் இந்தியா செல்வது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.
தொழிலாளர்கள் எந்த சுக, துக்க சம்பவங்களுக்கும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்தியா சென்றால், மீண்டும் சிங்கப்பூர் திரும்பி வர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் தான் சிங்கப்பூரில் பணிபுரியும் சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மிக சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த இக்கட்டான காலக்கட்டத்திலும் தனது திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். சரவணனுக்கு தமிழகத்தில் அவரது சொந்த ஊரில் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதாவது, கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி அவர்களது ஊரிலேயே திருமணம் நடப்பதாய் இருந்தது.
ஆனால், ஊருக்கு சென்றால் சிங்கப்பூர் மீண்டும் திரும்ப முடியாது என்பதை நன்கு உணர்ந்து வைத்திருந்த சரவணன், மாற்று வழியை யோசித்தார். அதாவது, Visiting Visa-வுக்கு அப்ளை செய்த சரவணன், தனது பெற்றோர், மணப்பெண் மற்றும் அவரது பெற்றோர் என மொத்த 5 பேருக்கு மட்டும் VTL திட்டம் மூலம் Visiting Visa-ல் சிங்கப்பூர் அழைத்து வந்துவிட்டார்.
இங்குள்ள பிரபலமான கோவில் ஒன்றில் தான் சரவணனுக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் தனது கல்யாணத்தை திட்டமிடப்பட்ட நாளில், அதே முகூர்த்த நேரத்தில் தாலி கட்டினார்.
கல்யாணம் நடக்குமா, நடக்காதா என்று அனைவரும் கவலை கொண்டிருந்த நேரத்தில், சமயோஜிதமாக செயல்பட்டு, யாரும் யோசிக்காத விதத்தில் மாற்றி யோசித்து, தனது திருமணத்தை குறித்த தேதியில் சரவணன் நடத்தி முடித்திருக்கிறார். இதுவரை சிங்கப்பூரில் எந்தவொரு தொழிலாளரும், Visiting Pass-ல் பெற்றோர்களையும், மணப்பெண்ணையும் வரவைத்து சிங்கப்பூரில் கல்யாணம் செய்து கொண்டது கிடையாது. இப்படியொரு சம்பவம் நடப்பது இதுவே முதன்முறையாகும்.
சரவணனுக்கு ஏற்பட்டது போன்ற இக்கட்டான சூழல் பல தொழிலாளர்களுக்கு கடந்த ஓராண்டில் ஏற்பட்டிருக்கிறது. திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் ரத்து செய்யப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதனால், பல தொழிலாளர்கள் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். ஆனால், சரவணனோ பிரச்சனையை கண்டு பின்வாங்காமல், அதனை எப்படி சால்வ் செய்வது என்பதை யோசித்து, மாற்று வழி கண்டறிந்து, தீர்வை கொடுத்துவிட்டார்.
ஒருவேளை திருமணம் தான் முக்கியம் என்று சென்றிருந்தால், அவரது வேலைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும். வேலைக்கு பயந்து ஊருக்கு செல்லாமல் இருந்திருந்தால், நிச்சயம் திருமணம் நின்றிருக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் சரவணன் எடுத்த முடிவு, இரு வீட்டாரின் கௌரவத்தை காப்பாற்றியதை விட, அப்பெண்ணின் பெயரை காப்பாற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.
Content Source: Nandana Air Travels, Trichy
“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”