TamilSaaga

சிங்கப்பூர்.. “வலி தாங்கமுடியாமல் கதறிய பெண்” : அவர் உடலில் பேட்டரியை செருகிய கொடூரம் – சிறையில் குற்றாவளி

சிங்கப்பூரில் ஒரு ஆண், அவரிடம் இருந்து அவரிடமிருந்து தனது பெண் தோழி திருடிவிட்டாள் என்று நினைத்து கோபமடைந்த அவர், தனது காதலியின் உடலில் ஒரு வெள்ளை பலகையில் எழுத பயன்படும் மார்க்கரையும் ஒரு உருளை பேட்டரியையும் வலுக்கட்டாயமாக அவரது உடலில் செருகியுள்ளார். இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தபோது அந்த ஆணினுடைய உறவினர் ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்து இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

சம்பவத்தன்று பிற்பகலில், பேருந்து நிறுத்தமொன்றில் அந்த இருவர் அப்பெண்ணை தாக்கியதால் வலி தாங்காமல் உதவிக்காக அந்த பெண் அலறியுள்ளார். இறுதியாக அந்த ​​அவள் காப்பாற்றப்பட்டாள், பின்னர் மருத்துவமனையில் அந்த பேட்டரி அப்பெண்ணின் உடலில் இருந்து அகற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை பாதுகாக்கும் “கேக் உத்தரவுகளால்” பெயரிட முடியாத 32 வயதான குற்றவாளிக்கு இன்று திங்கள்கிழமை (அக்டோபர் 4) 13 ஆண்டுகள், ஏழு மாதங்கள் மற்றும் 92 நாட்கள் சிறை மற்றும் 12 பிரம்படி விதிக்கப்பட்டது.

தண்டனை அளிக்கப்பட்ட அந்த நபர் தனது 27 வயது காதலி, அவரது தாயார் மற்றும் அவரது 33 வயது உறவினர் ஆகியோருடன் ஒரு பிளாட்டில் தங்கியிருந்தார். நவம்பர் 19, 2018 அன்று காலையில், குற்றவாளி தனது காதலி பிளாட்டிலிருந்து மின்சார ஸ்கூட்டர் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்ட பொருட்களை திருடிவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் அவரது காதலி தான் அந்த திருட்டை செய்யவில்லை என்று மறுத்தபோது, ​​குற்றவாளி மற்றும் அவரது உறவினர் கோபமடைந்தனர். மேலும் அப்பெண்ணை தாக்கி, அடித்து உதைத்தனர். தாக்குதலில், பாதிக்கப்பட்டவரின் தலையில் காயம் ஏற்பட்டது மற்றும் அவரது சட்டை கிழிந்தது.

குற்றவாளி அந்த பெண்ணின் முடியை ஒரு கத்தரிக்கோலால் வெட்டினர். சிறிது நேரம் கழித்து, அவன் தன் காதலியிடம் “உனது உடலுக்குள் ஒரு பொருளை வைக்கவேண்டும்” அதற்கு அனுமதிக்காவிட்டால் அவளை அடித்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதன் பிறகு அவன் அவரது ஆடைகளைக் கீழே இழுத்து, அவளது மலக்குடலில் ஒரு வெள்ளைப் பலகை மார்க்கர் பேனா மற்றும் ஒரு உருளை பேட்டரியைச் செருகியுள்ளார்.

Related posts