TamilSaaga

சிங்கப்பூரில் 8 பேருந்து ஓட்டுநர்களுக்கு பெருந்தொற்று – பேருந்து நடவடிக்கையில் பாதிப்பு இருக்குமா?

சிங்கப்பூரில் ஜூலை 30ம் தேதி நிலவரப்படி எட்டு பேருந்து ஓட்டுநர்கள் பெருந்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. ஸ்ட்ரெயிட் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளுடன் தொடர்பில் இருந்த சில பேருந்து ஓட்டுநர்கள் கடந்த சில வாரங்களில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இன்னும் சில பேர் அவர்களது வீட்டில் தனிமைப்படத்துதப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

LTAவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த நடவடிக்கைகள் 9,500 பேருந்து ஓட்டுனர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக LTA அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதனால் பேருந்து நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை, என்று அதிகாரிகள் கூறினார்.

எத்தனை ஓட்டுநர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை எல்டிஏ வெளியிடவில்லை. மேலும் 99 சதவிகிதத்திற்கும் அதிகமான பேருந்து ஓட்டுநர்கள் பெருந்தொற்று தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டுள்ளனர் என்றும் LTA கூறியது.

பொது போக்குவரத்து ஆபரேட்டர்கள் செயலில் உள்ள பெருந்தொற்று வைரஸ் கிளஸ்டர்களுக்கு அருகில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆன்டிஜென் விரைவு சோதனைகளை முன்கூட்டியே நிர்வகித்து வருகின்றனர். இது சாத்தியமான தொற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

Related posts