TamilSaaga

வெளிநாடுகளில் குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… இதில் சிங்கப்பூர் எத்தனையாவது இடம் தெரியுமா?

இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 225000 கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர் என இந்தியா வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை ஒட்டி வெளியேறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட கணக்கீடுகளின் படி கனடா அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 2019 முதல் 21 ஆம் ஆண்டு வரை அதிகபட்சமாக இந்தியர்களுக்கு வழங்கியுள்ளன என்று கூறியுள்ளது.

அதேசமயம் இந்தியர்களுக்கு அதிகமாக குடியுரிமை வழங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஏழாவது இடத்தில் உள்ளது. இதுகுறித்து இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறும்பொழுது நமது நாட்டின் குடிமக்கள் வெளிநாடுகளில் தங்கள் திறமையை நிரூபிப்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அவர்களது திறமை உள்நாட்டில் பயன்படாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம் என்று தெரிவித்தார்.மேலும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்க அரசு எல்லா வகையான முயற்சிகளையும் எடுத்து வருகின்றது என்று கூறினார்.

குறிப்பு: டிக்கெட்டுகளை, சரியான விலையில் விரைவாக புக் செய்ய கீழ்க்கண்ட ஏஜென்சியை அணுகவும்:
நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி விமான நிலையம், திருச்சி-622007
தொலைபேசி எண்: 9791477360.

Related posts