TamilSaaga

ஓடுபாதையில் சென்ற விமானம் திடீர் நிறுத்தம்… வலியால் துடித்த ஆடிட்டர்… கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

கோவை விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வருகின்றது. தினசரி காலை 6.45 மணிக்கு கோவையில் இருந்து விமானம் புறப்படுவது வழக்கம். கோவைக்கு அருகில் உள்ள அவிநாசியை சேர்ந்த 51 வயதான ஆடிட்டரான லோகநாதன் தனது சொந்த தேவைகளுக்காக புனே செல்வதற்காக மும்பை செல்லும் விமானத்தில் ஏறினார்.

பயணிகளை ஏற்றிய விமானம் ஓடு பாதையில் வேகமாக சென்று பறப்பதற்கு தயாரானது. இந்நிலையில் லோகநாதன் திடீரென்று நெஞ்சினை பிடித்துக் கொண்டு வலியால் துடித்தார். இதனைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக கூச்சலிட்டனர். விமானத்தின் பணிப்பெண்கள் உடனடியாக அவரை அணுகினர். அப்பொழுது லோகநாதனுக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதை அறிந்து உடனடியாக கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ குழுவினர் லோகநாதனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை சோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரை இறக்கி விட்ட விமானம் வழக்கம்போல் பயணிகளை ஏற்றுக்கொண்டு மும்பைக்கு சென்றது. இந்நிலையில் ஓடும் விமானத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts