TamilSaaga

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை… மெரினா பே பகுதியில் குவிந்த கூட்டம் – மறக்கப்பட்ட சமூக இடைவெளி

சிங்கப்பூரில் கடந்த ஜீலை 17ம் தேதி தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையானது Marina Bay Sands (MBS) and the Merlion Park ஆகிய பகுதிகளுக்கு அருகில் நடைபெற்றது.

இந்த ஒத்திகையை காண சிங்கப்பூர் மக்கள் தகுந்த பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் குவிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரின் பாடகர் மற்றும் எழுத்தாளர் டிக் லீ தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் மக்கள் கூட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் Esplanade Bridge ல் காலை மற்றும் இரவு நேரத்தில் அலைமோதிய கூட்டத்தின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இந்த ஒத்திகையை காண கோவிட் சூழலில் பாதுகாப்பற்ற முறையில் குவிந்த மக்களின் புகைப்படங்களை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Photo Courtesy : Dick Lee/IG & YK Chia/FB

Related posts