சிங்கப்பூரில் தனது மனைவி அவருடைய பணி மேற்பார்வையாளருடன் உடலுறவு கொள்ளும் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட 27 வயது இளைஞருக்கு, இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) நீதிமன்றத்தில் 13 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகநூலில் வெளியான அந்த பதிவு ஆயிரக்கணக்கான பகிர்வுகளை பெற்றது. அந்த பெண்ணின் அடையாளத்தை பாதுகாக்கும்பொருட்டு கைதான அந்த நபரின் விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.
அந்தரங்கப் படங்களை வைத்திருப்பது மற்றும் விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன. கடந்த டிசம்பர் 2019-ல் தனது மனைவியின் வீட்டை விட்டு வெளியேறிய அந்த நபர், அந்த பெண்ணின் மீது துரோகம் செய்ததாக சந்தேகிக்கிறார் என்று நீதிமன்றம் அறிந்தது. தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்து, அந்த 30 வயது பெண்ணின் தொலைபேசியை திருடி, அந்த தொலைபேசியில் இருந்து அவரது மேற்பார்வையாளருடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் அந்த படங்களையும் வீடியோக்களையும் கைப்பற்ற அவர் தனது சொந்த தொலைபேசியைப் பயன்படுத்தி, இன்னொருவருடன் தனது மனைவி இருந்த நெருக்கமான புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். மற்றவர்கள் “தன்னைப் போன்று ஆகிவிடக்கூடாது” என்றும் அவர் அந்த பதிவில் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்க பெயரிட முடியாத அந்த 27 வயது நபர், திருட்டு மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை கடந்த செப்டம்பர் 21 அன்று ஒப்புக்கொண்டார். அவரது தண்டனையில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும் என்று தகவல் வெளியானது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் குற்றம் நடந்த நேரத்தில் அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ததாக நீதிமன்றம் கூறியது. ஆனால் அவர்கள் ஒன்றாக வாழவில்லை. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 6, 2020 அன்று, பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவரது கழிவறையை பயன்படுத்திக்கொள்ள அவரிடம் கேட்டுள்ளார்.
கழிவறையை பயன்படுத்திய அவர், அந்த வீட்டின் ஓய்வறையில் இருந்த அவரது மனைவியின் கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். தனது மனைவி இன்னொருவருடன் தொடர்பில் உள்ளார் என்ற சந்தேகம் அவருக்கு இருந்த நிலையில் அவர் அந்த போனை திருடியுள்ளார். மேலும் அந்த போனில் பாதிக்கப்பட்டவரின் மேலாடை இல்லாத நான்கு வினாடி கிளிப், அந்த பெண்ணின் முகம் ஓரளவு தெரியும் புகைப்படம், 16 வினாடிகள் அந்த பெண் முழுமையாக நிர்வாணமாக இருக்கும் வீடியோ மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தனது மேற்பார்வையாளருடன் உடலுறவு கொள்வது போன்ற படங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.