TamilSaaga

சிங்கப்பூர் டெல்கோ பகுதியில் “ஆள்துளை வெடிப்பு” : விசாரணை நடத்தும் அதிகாரிகள் – காணொளி உள்ளே

சிங்கப்பூரில் புக்கிட் படோக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 24) டெல்கோ ஆள்துளை வெடித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளாக் 439 புக்கிட் பாட்டோக் வெஸ்ட் அவென்யூ 8ல் உள்ள கார்பார்க் நிலையத்திற்கு வெளியே இந்த வெடிப்பு நிகழ்ந்ததை டாஷ்காம் வீடியோ காட்சிகள் காட்டின.

சம்பவம் அறிந்து உடனடியாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர். வெடிப்பு நடந்த இடத்தை சுற்றி செங்கற்கள் சிதறிக்கிடந்தன. SCDF இந்து காலை9.10 மணியளவில் ஒரு ஆள்துளையில் இருந்து “ஃப்ளாஷ் ஃபயர்” க்கான அழைப்பைப் பெற்றதாகவும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ சம்பவமோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என்று கூறினார்.

மேலும் இந்த நிகழ்வு குறித்து SCDF அதிகாரிகள் பேசியபோது “இந்த சம்பவம் தற்செயலானது என்றும் மற்றும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன” என்றும் அதிகாரிகள் கூறினார். மேலும் mothership செய்தி நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில் இந்த வெடி சம்பவம் தெளிவாக தெரிகின்றது.

இப்பகுதியில் உள்ள அனைத்து மேன்ஹோல்களையும் சரிபார்க்க எஸ்பி, பப், சிட்டி கேஸ் – டவுன் கவுன்சில் என்று அனைவரையும் களமிறக்கியுள்ளதாக திருமதி கோர் கூறினார். கோர் அந்த பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts