TamilSaaga

“உருப்பட மாட்டோம்-னு சொன்னாங்க; சாதிச்சிட்டோம்!” – அண்ணாத்த பட பாடலாசிரியரின் மனைவி உருக்கம்

இந்த உலகம் டிஜிட்டல் முறையில் எவ்வளவு வளர்ந்தாலும் இன்றளவும் சினிமாவும், சினிமா பட வாய்ப்புகளும் மிகவும் அரிதாகவே தென்படுகிறது என்பதும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஓர் உண்மை. குறிப்பாக தமிழ் சினிமாவை பொருத்தவரை தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் கலைஞர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது அந்த வகையில் தனது பாடல்கள் மூலம் பிரபலமான ஒருவர்தான் அருண்பாரதி.

கவிஞர் அருண்பாரதி அவர்கள் பிரபல இயக்குனரும், நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் “ஆஸ்தான” பாடலாசிரியர் என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. அந்த அளவிற்கு விஜய் ஆண்டனியின் ஏறத்தாழ அனைத்து படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் தல அஜித் அவர்களின் விஸ்வாசம் படத்திலும் அவர் “தல்லே தில்லாலே” என்ற பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அருண்பாரதி அவர்களுடைய கலை வாழ்க்கையின் அடுத்த படியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் மாதம் நான்காம் தேதி வெளிவர இருக்கின்ற அண்ணாத்த படத்தில் ஒரு பாடலை அவர் எழுதியுள்ளார் இந்நிலையில் தாங்கள் திரைஉலகில் கடந்து வந்த கடினமான பாதைகளை குறித்து அவரது மனைவியும் எழுத்தாளருமான பத்மாவதி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

ஆரம்ப காலகட்டங்களில் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பது குறித்தும் தடைகளைத் தாண்டி தற்பொழுது சாதனைகளை படைத்து வரும் தனது கணவர் குறிக்கும் விதமாக அவர் வெளியிட்ட பதிவில்

“உதவாக்கரையும் உதவாக்கரையும் சேர்ந்து உருப்படமா போக போவுது ” சூர்ய வம்சம் பஞ்ச் டயலாக் பேசியவர்களின் வார்தைகளை எல்லாம் பொய் ஆக்கி இருக்கிறோம் .இந்த உயரத்தை அடைய எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கிறாய் என்று எனக்கு தெரியும் . வாழ்துக்கள் அருண்பாராதி. தல அஜித் சார் விஸ்வாசம் தொடர்ந்து இன்று தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த படத்திலும் உனது பாடல் இடம் பெற்று இருக்கிறது வாழ்த்துக்கள்” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

பத்மாவதி பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா என்ற சின்னத்திரை தொடர் உள்பட பல சின்னத்திரை தொடர்களில் எழுத்தாளராக பணியாற்றி வருகின்றார்.

Related posts