TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியர்களே… உங்கள் PAN கார்டு மிக மிக அவசியம்

அண்டை நாடான இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் மக்களுக்கு பயன்படும் பல கார்டுகளில் பெர்மனெண்ட் அக்கௌன்ட் நம்பர் என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (PAN) என்பதும் முக்கியமான ஒன்று. இந்த அட்டை என்பது தனிநபர் தொழில் நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் என பல்வேறுபட்ட வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்திய அரசின் வருமான வரித் துறையால் வருமான வரி சட்டப் பிரிவு 139 இன் கீழ் வழங்கப்படுகிறது.

பத்து இலக்கங்கள் கொண்ட இந்த கார்டுகள், வங்கி கணக்கு, பங்கு வர்த்தக கணக்கு, வீட்டு கடன் கணக்கு, மோட்டார் வாகனம் வாங்க கடன், சொத்துக்கள் வாங்க என அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் பயன்படுகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட இந்த பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியம் என்றும் தற்போது இந்திய அரசியலமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுறியும் ஊழியர்களுக்கு இந்த கார்டு அவசியமா என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஏன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு PAN கார்டு அவசியம்?

ஒரு ஊழியர் வெளிநாட்டில் 180 நாட்கள் தங்கினால் அவர்கள் NRI என்று கருதப்படுவார்கள். இந்நிலையில் நீங்கள் பயன்படுத்தும் இந்த PAN கார்டில் தான் நீங்கள் வாங்கும் சம்பளம் மற்றும் உங்கள் வரவுசெலவுகள் பதிவாகும். அதேசமயம் வெளிநாட்டில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு உங்கள் தாயகத்தில் வருமான வரி என்பது கிடையாது. ஆகையால் PAN கார்டு வைத்திருப்பதன் மூலம் உங்கள் சம்பளம் அதில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் நீங்கள் நாடு திரும்பும்போது உங்களுக்கு அது சிறந்த பல நன்மைகளை வழங்குகிறது.

PAN கார்டு இல்லாத பட்சத்தில் உங்கள் வெளிநாட்டு வருமானத்தை உங்கள் தாய்நாட்டின் அரசுக்கு கணக்கு அளிக்காமல் நீங்கள் பயன்படுத்துவதற்கு சமமாக கருதப்படுகிறது. ஆகையால் நீங்கள் வெளிநாட்டிற்கு செல்லும் முன் கட்டாயம் நீங்கள் PAN கார்டு பெற்றுச்செல்வது சாலச்சிறந்தது. அதே சமயம் வெளிநாட்டில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு உங்கள் தாயகத்தில் வருமானவரி என்பதை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் வெளிநாட்டில் சம்பாரிக்கும் பணத்தை கொண்டு நீங்கள் உங்கள் தாயகத்தில் சொந்த தொழில் செய்யும்பட்சத்தில் கட்டாயம் நீங்கள் வருமான வரியை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் வேலைநாடுகளுக்கு செல்லும் முன் நீங்கள் இந்தியர்களாக இருக்கும்பட்சத்தில் PAN கார்டு அப்ளை செய்து எடுத்துச்சென்றால் உங்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts