TamilSaaga
Doctor haridoss singapore

தவறான சிகிச்சை.. சிங்கப்பூரில் உயிரிழந்த இந்திய கட்டுமான ஊழியர்.. மருத்துவருக்கு வெறும் 1,500 டாலர் அபராதம்!

மேம்போக்காக சிகிச்சை அளித்ததன் காரணமாக, சிங்கப்பூரில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராக பணியாற்றி வந்தவர் சேவியர். இவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு ‘சோரி­யா­சிஸ்’ எனும் தோல் அலர்ஜி ஏற்பட, அவரது முகம், கைகால்களில் தடிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, 2014 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சிங்கப்பூரில் மூன்று வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது. அந்த மூன்று மருத்துவமனைகளிலும் அவருக்கு சோரியாஸிஸ் இருந்தது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு ஆயிண்ட்மென்ட்களும் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் B.Sc Nursing முடித்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை” – உடனே Apply செய்யலாம்

அப்­ப­டி­ ட்ரீட்மெண்ட் எடுத்தும், அந்த அலர்ஜி அவருக்கு குணமடையவில்லை. இதனால், அதே 2014ம் ஆண்டு நவம்­பர் 24ஆம் தேதி லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள ‘தேக்கா கிளி­னிக்’கிற்கு சேவி­யர் சென்றிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரிதாஸ் (77), சோரி­யா­சி­சால் சேவி­யர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்டறிந்தார். பிறகு அவ­ருக்கு ஊசி போட்டு, சில மாத்­தி­ரை­க­ளை­யும் கொடுத்தார். அப்படி அளிக்கப்பட்ட சிகிச்சையில் ‘எம்­டி­எக்ஸ்’ என்பதும் ஒன்று. இது புற்­று­நோய்ச் சிகிச்­சை­யிலும் கடும் சோரி­யாசிசைக் குணப்படுத்த பயன்­ப­டுத்­தப்­படு­கிறது. அதேசமயம், இது கடும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் மருந்தாகும். குறிப்பாக, சிறு­நீ­ர­கப் பிரச்­சினை இருப்­போ­ருக்­குத் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யுடன் இந்த மருந்தை கொடுக்­க வேண்­டும்.

ஆனால், சேவியருக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளை செய்யாமல், மருத்துவர் ஹரிதாஸ் அந்த மருந்தை கொடுத்திருக்கிறார். சேவியருக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை இருந்திருக்கிறது. பரிசோதனை செய்யாததால் இந்த விஷயம் மருத்துவருக்கு தெரியவில்லை.

மேலும் படிக்க – பொய் மூட்டை.. சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கே “அல்வா” கொடுத்த முன்னாள் எம்.பி. ரயீசா – கூட்டு சேர்ந்ததால் எதிர்க்கட்சித் தலைவருக்கும் “செக்”

ஏற்­கெ­னவே சிறு­நீ­ர­கப் பிரச்­சினை இருந்­த­தைக் கண்­ட­றி­யத் தவ­றி­விட்­டார் என்­றும் கூறப்­பட்­டது. இதனால், சேவியருக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்பட, பூஞ்­சைத் தொற்று காரணமாக, 2014 டிசம்­பர் மாதம் உயிரிழந்துவிட்டார்.

இதனால், தனி­யார் மருத்­து­வ­ரான ஹரி­தாஸ்­மீது முத­லில் குற்றம் சாட்டப்பட்டு, பின்­னர் அந்த குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்­து­வர் ஹரிதாஸுக்கு $1,500 அப­ரா­தம் விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts