சிங்கப்பூர் நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்படும் Scoot விமான சேவை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் “நவம்பர் 29 முதல் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) அறிவிப்புடன், இந்த இரு நாடுகளுக்கு இடையே அதிக விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் – மேலும் இதன் விளைவாக நாங்கள் உங்களை சிங்கப்பூர் கொண்டுள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று நம்புகிறோம்.
சிங்கப்பூர் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கிடையே விமானப் பயண ஏற்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதால், கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் நாங்கள் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். காத்திருங்கள்!. என்று கூறி இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் மற்றும் இருமார்கமாக செல்லவிருக்கும் பயணிகளுக்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளது.