TamilSaaga

சிங்கப்பூரில் இப்படியும் சில இளசுகள்.. நடுரோட்டில் ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொண்ட சம்பவம் – தலையில் தட்டி கைது செய்த போலீஸ்

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 18) இரவு சிங்கப்பூரின் பிரின்செப் தெருவில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து 19 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவத்தன்று இரவு 10.53 மணியளவில் மேற்குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட சண்டை குறித்து தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அந்த நபரை கைது செய்ததாகவும் போலீசார் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் 2 இளைஞர்களுக்கு கூரையை பிச்சுக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. அதுவும் இரண்டு முறை – திறமைக்கார பசங்கதான்!

Stomp இந்த சம்பவத்தின் முழு வீடியோவினையும் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது, அந்த வீடியோவில் பல ஆண்கள் தகராறில் ஈடுபடுவதை நம்மால் காணமுடிகிறது. மேலும் இந்த தகராறு முக்கியமாக இரண்டு ஆண்களுக்கு இடையே நடப்பதையும் காணமுடிந்தது. இருவரையும் அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும், இருவரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டு சண்டையிடுகின்றனர். இதற்கிடையில், மேலும் இரண்டு ஆண்கள் மற்றொரு பக்கம் தரையில் உருண்டு சண்டையிடுவதையும் காணமுடிந்தது.

சிங்கப்பூரில் 99,000 முதலாளிகளுக்கு “840 மில்லியன் டாலர்கள்” உதவித் தொகை – இனியாவது வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்தந்த Pass-க்கு ஏற்ற உண்மையான சம்பளம் கிடைக்குமா?

இந்த மொத்த சண்டையும் பெண்களுக்காக நடந்த சண்டை என்று சந்தேகிக்கப்படுகிறது, மேலும் இந்த விஷயத்தில் தொடர்ந்து போலீசார் தவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூர் இளைஞர்கள் தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் சில சிங்கப்பூர் இளைஞர்கள் இதுபோல நடுரோட்டில் கட்டிபுரள்வது வேதனை அளிக்கும் விஷயமாகவே உள்ளது.

Related posts