TamilSaaga

“சிங்கப்பூர் முதல் தமிழகம் வரை” : தொடங்கியது நவம்பர் மாத புக்கிங் – முழு விமான பட்டியல் உள்ளே

அண்டை நாடான இந்தியாவின் பல பகுதிகளுக்கு தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சிங்கப்பூரில் இருந்து அனுதினம் சென்று வருகின்றனர். பெருந்தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த சேவை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை Air bubble மற்றும் வந்தே பாரத் சேவைகளை தவிர பிற பன்னாட்டு விமான சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெகு சில நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையை அளித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் முதல் தமிழகத்தின் திருச்சி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு செல்ல விமானங்கள் இல்லாமல் பெரிய அளவில் தவித்து வந்தனர் மக்கள். அதே நேரத்தில் திருச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட பல இந்திய நகரங்களுக்கு இரு நாடு அரசு சிறப்பு விமானங்களை இயக்கினாலும் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் குறித்த நேரத்தில் தங்களுடைய அவசர தேவைக்காக சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த சூழலில் தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு நவம்பர் மாத விமான சேவை தொடங்கி நடைபெற்று வருகின்றது. சிங்கப்பூரில் இருந்து கோழிக்கோட்டிற்கு திருச்சி வழியாக நவம்பர் 5,12,19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் செல்லவுள்ளன.

அதே போல சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இந்த முறை அதிக விமானங்களை இயக்கும் முயற்சியில் 5,,6,9,10,11,12,13,16,17,18,19,20,23,24,25,26,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 18 விமானங்களை இயக்கவுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனம்.
,,
மேலும் சிங்கப்பூரில் இருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 8,15,22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 விமானங்களை இயக்கவுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனம்.

Related posts